Lanka Smart Tech
08/01/2021
January 08, 2021
முஸ்லிம் சமூகத்தை இந்த அரசு பழிவாங்குவது அப்பட்டமாக தெரிகிறது! -ரிஷாட் பதியுதீன்
ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் தொடர்பாக விசாரணை செய்து வரும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் விசாரணை அறிக்கைகள் வெளிவருவதற்கு முன்னர், அது தொடர்பில் தன்னை சம்பந்தப்படுத்தி குற்றஞ்சுமத்தியுள்ள அமைச்சர் விமல் வீரவன்சவின் நடவடிக்கைகள் குறித்து, அதே ஆணைக்குழுவில் மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் பதியுதீன் இன்று (08) முறைப்பாடொன்றை பதிவு செய்துள்ளார்.
தனது சட்டத்தரணி ருஷ்தி ஹபீபுடன் இணைந்து, இந்த முறைப்பாட்டை பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் செய்துள்ளார். அதன் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த அவர், விமல் வீரவன்சவின் இனவாதக் கருத்துக்களையும், அப்பட்டமான பொய்களையும், பிழையான குற்றச்சாட்டுக்களையும் கண்டித்ததுடன், அது தொடர்பில் ஜனாதிபதி ஆணைக்குழு உரிய கவனம் செலுத்துமெனவும் நம்பிக்கை வெளியிட்டார்.
ஜனாஸா விவகாரம் தொடர்பில் ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்த அவர் கூறியதாவது,
“கொரோனா ஜனாஸாக்களை தொடர்ந்தும் எரிக்க வேண்டுமென்ற அரசின் நிலைப்பாடு அப்பட்டமான பழிவாங்கல் நடவடிக்கை ஆகும். இலங்கை வாழ் இருபது இலட்சம் முஸ்லிம்களும் இன்று வெந்து, நொந்து போயுள்ளனர். அதுமாத்திரமின்றி, உலகிலுள்ள சுமார் இரண்டு பில்லியன் முஸ்லிம்களும் கவலையில் இருப்பதோடு, பல நாடுகள் இலங்கைக்கு எதிரான எதிர்ப்பையும் வெளியிட்டு வருகின்றன. இதன் விளைவு பாரிய தாக்கத்தை ஏற்படுத்தி, நாட்டையும் சமூகங்களையும் பாதிக்கும்.
முஸ்லிம் சமூகத்தை இந்த அரசு பழிவாங்குவதற்காகவே எமது மத உரிமையை தடுத்து நிறுத்துகின்றது. அரசியலில் ஞானம் உள்ளவர்களாக இருந்தால் இவ்வாறான பிற்போக்குத்தனமான, படுகேவலமான செயலை செய்யமாட்டார்கள். முஸ்லிம் அரசியல்வாதிகள், மதத்தலைவர்கள், புத்திஜீவிகள், சமூக ஆர்வலர்கள் மற்றும் மனிதநேயமுள்ள மாற்று மத பிரமுகர்களும் இதனை வென்றெடுப்பதில் தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். அத்துடன், நாட்டின் முன்னாள் தலைவர்களான சந்திரிக்கா பண்டாரநாயக்க, மைத்திரிபால சிறிசேன மற்றும் தமிழ் எம்.பிக்கள், சிங்கள எம்.பிக்கள் உட்பட சிவில் சமூக ஏற்பாட்டாளர்களும் இதற்காக குரல் எழுப்பி வருகின்ற போதும், அரசும் சுகாதார அமைச்சும் இன்னும் செவிடன் காதில் ஊதிய சங்குபோலதான் இருக்கின்றன.
எத்தனையோ பேச்சுவார்த்தைகள், ஆர்ப்பாட்டங்களை எல்லாம் புறக்கணித்து, கருத்திற்கெடுக்காது, சமூகத்தின் மதம் சார்ந்த கோரிக்கையை தட்டிக்கழிப்பதன் நோக்கம் வெறுமனே அரசியல் சார்ந்தது மட்டுமே.
அரசாங்கத்துக்கு ஆதரவளிக்கும் எம்.பிக்கள் “இன்று சரிவரும், நாளை சரிவரும்” என்ற நம்பிக்கையை அளித்து வருவதினாலேயே, சமூகம் இன்னும் பொறுமை காக்கின்றது. “வெண்ணெய் திரண்டு வரும்போது தாழியை உடைக்கக் கூடாது” என்ற கோரிக்கையும் எழுந்து வந்தது. எனினும், எதுவுமே நடந்ததாகத் தெரியவில்லை. புதிய நிபுணர் குழுவின் அறிக்கையைக் கூட தட்டிக்கழிக்கும் சுபாவத்தில் தான் இன்னும் இருக்கின்றனர்” என்றார்.
08/01/2021
06.01.2012 யிலிருந்து WhatsAppயினை பயன்படுத்தக்கூடிய அனைவருக்கும் Terms and Condition யினை Agree பன்னவும் என்ன அமைப்பில் Screen Message ஒன்று வந்ததனை கண்டிருப்பீர்கள். சிலர், அதனை Agree யும் செய்திருப்பீர்கள்.
அவ்வாறு Agree செய்யாத பட்டசத்தில் இவ் WhatsAppயினை 08.02.2021 வரைதான் பயன்படுத்தப்பட முடியும் என்றவாறு குறிப்பிடப்பட்டுள்ளது. இப்பதிவில் நாம் எதற்காக வேண்டி அவ் Terms and Consitionsயினை agree செய்ய வேண்டும்.. அந்த condtionsயில் என்னவெல்லாம் குறிப்பிடப்பட்டுள்ளது, அது பயனுள்ளதா? ஆபத்தானதா என்பதனைப்பற்றி விளக்கமாக பார்கலாம்.
என்னுடைய பல நண்பர்கள் என்னைத்தொடர்பு கொண்டு இவ்வாறு ஒரு message அவர்களுடைய whatsAppயினை திறந்ததும் வந்ததாகவும் இவ்வாறு பலருக்கும் வந்ததாகவும் என்னிடம் குறிப்பிட்டார்கள். பொதுவாக WhatsAppயில் பல மறைமுகமான செயற்பாடுகள் நடைபெற்றுக் கொண்டுதான் வருகின்றது. இதனால் நம்மில் பலர் ஏற்கனவே பாதிக்கப்பட்டுள்ளனர்.
தற்போது வந்திருக்கக்கூடிய இவ் WhatsAppயினைப்பயன்படுத்துவதன் மூலமும் நாம் அனைவருமே உண்மையில் பாதிக்கப்படத்தான் போகின்றோம். இவ்வாறு வந்த Terms and Condtionsயினை ஒவ்வொன்றாக வாசித்தபோது பல ஆபத்தான விடயங்கள் காணப்பட்டது,
இதில் முதலில் குறிப்பிடப்பட்ட விடயம், WhatsApp யில் நீங்கள் மற்றவர்களுக்கு அனுப்பக்கூடிய மற்றும் பெறக்கூடிய messageகளிலிருந்து தகவல்களைப் பெற்று அதனை Facebook நிறுவனமானது அவர்களுடைய வணிகத்தேவைகளுக்காக பயன்படுத்தப்போகின்றோம் என்றும் இவ்வாறு எடுக்கப்படுகின்ற தகவல்களை Facebookயினோடு இணைந்த ஏனைய வணிக நிறுவனங்களுடன் பகிர்ந்து கொள்வோம் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதாவது பொதுவாக உலகில் காணப்படுகின்ற ஏனைய நிறுவனங்களுடனல்லாது Facebookயினோடு தொடர்புபட்ட வணிக நிறுவனங்களுடன் மாத்திரம் பகிர்ந்து கொள்ளப்போவதாக குறிப்பிட்டுள்ளார்கள். இவ்வாறு எடுக்கப்படுகின்ற தகவல்களின் பயன் யாதெனின், நீங்கள் பொதுவாக ஒரு நண்பருடன் Sumsung Mobile யினை வாங்குவது பற்றி Whatsappயில் chat செய்து கொண்டிருந்தால், அந்த தகவலினை எடுத்து உங்களுக்கு WhatsApp Advertisement ஊடாகவோ அல்லது Whatsappக்காக நீங்கள் பயன்படுத்துகின்ற numberயினைப் பயன்படுத்தி திறக்கப்பட்ட Facebookயின் ஊடாகவோ அவர்கள், அவர்களுடைய Advertisement போன்ற செயற்பாடுகளை மேற்கொள்ளுவார்கள. இதுமட்டுமல்லாமல், ஏனைய வணிக தேவைகளுக்கும் பயன்படுத்தில் கொள்வார்கள். நீங்கள் இவ் Terms and Condtionsக்கு Agree செய்யும் பட்சத்தில் நீங்கள் ‘Hi’ எனும் அனுப்பக்கூடிய messageயிலிருந்து images, Videosகள் என அத்தனை விடயங்களையும் அவர்கள் கவனித்து அவர்களுடைய தேவைகளுக்காக பயன்படுத்துவார்கள். இதன்மூலம் உங்களுடைய அந்தரங்க விடயங்களைக்கூட நீங்கள் ஏனையவர்களுக்கு share செய்ய நேரிடலாம். இதனைத்தான் அவர்கள் simple ஆக அங்கு குறிப்பிட்டுள்ளார்கள்.
மேலும் அடுத்த conditionகளில் குறிப்பிட்டுள்ள விடயங்களில், நாம் ஏதாவது ஒரு WhatsAppயில் காணப்படுகின்ற பல featureகளில் ஏதவாது ஒன்றினைப் பயன்படுத்த வேண்டுமாக இருந்தால், உதாரணமாக, GPS Location Shareயினைப் பயன்படுத்தப்பட வேண்டுமாக இருந்தால், அந்த Featuresயினோடு சார்ந்த அனைத்து தகவல்கள் அனைத்தையும் நாமும் shareசெய்ய வேண்டும். இவ்வாறு செய்யும் பட்சத்தில்தான் அவ் WhatsApp Featureயினை பயன்படுத்த முடியும். அதாவது, நாம் share பன்னக்கூடிய இவ்வாறான தகவல்களை அவர்களும் பயன்படுத்திக் கொள்வார்கள். அதாவது, நாம் எங்கு செல்கின்றோம், யாருக்கு நாம் locationயினை பகிர்கின்றோம், தற்போது நீங்கள் எங்கு அதிகமான நேரத்தினை செலவு செய்கின்றீர்கள் போன்ற விபரத்தினை உங்களிடம் இருந்து பெற்று Facebook மற்றும் அதனுடைய ஏனைய துணை நிறுவனங்கள் பயன்படுத்திக் கொள்ளும். இவ்வாறு உங்களிடமிருந்து தகவல்களை பெற்ற பின்புதான் WhatsAppஆனது அதனுடைய featureயினை உங்களுக்கு பயன்படுத்த அனுமதிக்கும். அதுமட்டுமல்லாது, நாம் ஏதாவது Audioயினை record செய்து அனுப்பும் பட்சத்தில் அதனையும் அவர்கள் கேட்டு அதனை அவர்களுடைய business தேவைகளுக்கு பயன்படுத்திக் கொள்வார்கள். சற்று சிந்தியுங்கள், எங்களுடைய dataவினை எவ்வாறெல்லாம் அவர்கள் பயன்படுத்த முடியும்.
மேலும், நீங்கள் உங்களுடைய நண்பர்களுக்கு, loverக்கு அல்லது வேறு யாருக்காவது அவர்கள் Offlineயில் இருக்கும் பொழுது ஏதாவது Message, image, audio, videoயினை அனுப்பினால், அதனை 30 நாட்களுக்கு WhatsAppயினுடைய Server யில் வைந்திருந்து அவர்கள் இடையில் onlineவந்தால் அதனை அனுப்பிவிடுவர்கள். அவ்வாறு இல்லாவிட்டால் அதனை Delete செய்து விடுவார்கள் என்ற விடயத்தினையும் இவ் Terms and Conditionsயில் குறிப்பிட்டுள்ளார்கள். அதேபோன்று நீங்கள் forwardசெய்யக்கூடிய messageயினை அவர்கள் அவர்களுடைய serverயில் Lifelong பதிந்து வைத்திருப்பார்கள். இதனையும் சற்று சிந்தியுங்கள். எதற்காக இவ்வாறு storeபன்னுகின்றார்கள் என்று எனக்கு தெரியவில்லை. ஒரு வேலை யார் அந்த Message யினை உருவாக்கி யாரெல்லாம் பகிர்ந்து கொள்கின்றார்கள் என்ற விபரத்தினைப் பெற்றுக்கொள்வதற்காகவும் இருக்கலாம்.
எங்களுடைய mobile phoneயில் எவ்வாறான தகவல்களை பெற்றுக்கொள்கிறார்கள் என்றால், என்ன வகையான mobile நாம் பயன்படுத்துகிறோம் என்றும் அதில் இருக்கக்கூடிய OS, Battery Level, signal Strength in location, எந்த வகையான versionஐக் கொண்ட Appயினைப் பயன்படுத்துகின்றோம், நாம் பயன்படுத்தக்கூடிய Internet Browsersயினுடைய தகவல், பயன்படுத்தும் mobile network பற்றிய விபரங்கள், எந்த நபருடன் அதிகமாக callயினைப் பயன்படுத்துகின்றோம், அவர்களுடைய contact information போன்ற அதிகமான தகவல்.. இதுமட்டுமல்ல இதே போன்று ஏராளமான தகவல்கள்களைப் அவர்கள் பெற்றுக் கொள்ளப்போவதாக குறிப்பிட்டுள்ளார்கள்.
அதே போன்று Transaction dataக்களையும் பெற்றுக் கொள்ளப்போவதான குறிப்பிட்டுள்ளார்கள். அதாவது எவ்வாறானவர்களுடன் தொடர்பினைப் பேனுகின்றோம், அவர்களோடு எவ்வாறு நாம் பேசுகின்றோம் எவ்வாறு நம்மளுடைய அனுகுமுறை காணப்படுகின்றது போன்ற தகவல்களையும் பெற்றுக் கொள்ளப் போகின்றார்கள். மொத்தத்தில் நம்மளுடைய Whatsapp யினை பக்கத்திலிருந்து வேரொரு நபர் உற்று நோக்குவதைப் போன்று இருக்கப்போகின்றது. இவ்வாகையான விடயங்களை indirect ஆக அதில் குறிப்பிட்டுள்ளார்கள். மெலும் Business Account பயன்படுத்தக்கூடியவர்களது(UPA Details) Transaction data, பணப்பரிமாற்றம்போன்ற விடயங்களையும் அவர்கள் எடுக்கப்புாவதாக குறிப்பிட்டுள்ளார்கள்.
ஆக, அந்த Terms and Constions யில் agree செய்யும் பட்சத்தில் மேல் குறிப்பிட்ட அனைத்துக்கும் நீங்கள் இணங்குவதான அவர்கள் கருத்திற்கொள்வார்கள். நீங்களும் எங்களுடைய அனைத்து தகவல்களையும் பயன்படுத்துங்கள், எங்களுக்கு எவ்வித ஆட்சேபனையும் இல்லை என்றவாறு அமையும். மேலும் இக் condtionsயில் உள்ள நல்ல விடயம் யாதெனின், WhatsAppயில் இல்லாத ஒருவருடைய தகவல்களை நாம் பெற்றுக் கொள்ள மட்டோம் என்று குறிப்பிட்டுள்ளார்கள்.
மொத்தத்தில், நீங்கள் Agree பன்னும் பட்சத்தில் மாத்திரமே 08.02.2021க்கு பின்பு இவ் WhatsAppயினைப் பயன்படுத்த முடியும். அல்லாவிடின் உங்களுக்கான அனுமதியானது ரத்துசெய்யப்படும். இங்கு இவ்வாறான நன்மையும் தீமையும் காணப்படுகின்றது. இதனை நீங்கள்தான் சிந்தித்து பயன்படுத்த வேண்டும். மேலும், இதனை விடுத்து வேறு ஏதாவது பதிலீட்டு App பயன்படுத்த முடியுமா எனக்கேட்டால், அதற்காக வேண்டி Telegram, Hike போன்ற Appயினைப் பயன்படுத்திக் கொள்ள முடியும். WhatsAppயினோடு Compare செய்யும் பட்சத்தில், இதனைப் பாவிப்பதால் ஏற்படும் விளைவுகள் மிகக்குறைவாகவே காணப்படும்.
பலர் Whatsapp யினைப் பயன்படுத்துவதனை தவிர்க்க முடியாமல் கூட போகலாம். இவ்வாறாவர்களுக்கள் கட்டாயம் February 08 வரை காத்திருந்து அன்று அதற்கான மாற்றீடு கிடைக்காத பட்சத்தில் சிந்தித்து செயல்பட முடியும். மேலும் அதிகமானவர்கள் இவ் conditionsக்கு Agree ஆகாத போது நிறுவனத்தினுடைய வீழ்ச்சி அதிகமாக காணப்படும். இதன் போது அவர்கள் இவ் terms and condtionsயினை நீக்கவும் வாய்ப்புண்டு. இதனால் கடைசி வரை காத்திருந்து இயலாதபட்சத்தில் மாத்திரம் இதனை பொதுத் தேவைக்காக பயன்படுத்தி கொண்டு ஆபத்திலிருந்து தவிர்ந்து கொள்ள முடியும்.
08/01/2021
08/01/2021
முடிந்தால் என்னை கைது செய்யுங்கள்! அசாத் சாலி சவால்!
முடியுமென்றால் தம்மை கைது செய்யுமாறு தேசிய ஐக்கிய முன்னணியின் தலைவர் அசாத் சாலி சவால் விடுத்துள்ளார்.
கொழும்பில் நேற்றைய தினம் (07) நடைபெற்ற ஊடவியலாளர் சந்திப்பில் அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.
அசாத் சாலி போன்றவர்கள் ஈஸ்டர் ஞாயிறு தற்கொலைத் தாக்குதலுடன் தொடர்புடையவர்கள் எனவும் அவர்களை கைது செய்யாமை பொலிஸாரின் குறைபாடாகும் எனவும் அமைச்சர் விமல் வீரவன்ச குற்றம் சுமத்தியிருந்தார்.
இந்தக் குற்றச்சாட்டுக்கு பதிலளிக்கும் வகையில் அசாத் சாலி நேற்றைய தினம் இந்த சவாலை விடுத்துள்ளார்.
“என்னை கைது செய்யுமாறு விமல் கோருகின்றார். மரணத்தை வைத்து அரசியல் செய்கின்றார்கள், முடிந்தால் என்னை கைது செய்யுமாறு விமல் வீரவன்சவிற்கு நான் சவால் விடுகின்றேன்” என அசாத் சாலி கூறியுள்ளார்.
Click here to claim your Sponsored Listing.
Category
Culinary Team
Attire
Contact the business
Website
Address
590, Siraj Nagar, Thambalagamam
Trincomalee
31314