Yarl Rider

Yarl Rider

Share

02/01/2026

ஆரியகுளம் சந்தி திக்குமுக்காட போகுது நாளைக்கு 😁😁

20/12/2025

🚨தையிட்டி விகாராதிபதிக்கு கௌரவம் வழங்கப்படும் நிகழ்விற்கு NPP கடும் எதிர்ப்பு! 🚫

🚨 யாழ். தையிட்டி விகாரை விவகாரம்: தேசிய மக்கள் சக்தி கடும் எதிர்ப்பு! 🚫

🚫 கொழும்பில் புத்த சாசன அமைச்சரால் தையிட்டி விகாராதிபதிக்கு கௌரவம் வழங்கப்படும் நிகழ்விற்கு யாழ்ப்பாணத்தில் தேசிய மக்கள் சக்தியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

🚨முக்கிய முடிவுகள்:

🚨'சட்டவிரோத விகாரை' அறிவிப்பு:
தையிட்டி திஸ்ஸ விகாரை சட்டவிரோதமானது என மூன்று மொழிகளிலும் விகாரைக்கு முன்பாக பெயர் பலகை நாட்டுவது என தீர்மானிக்கப்பட்டுள்ளது.

🚨கௌரவத்திற்கு எதிர்ப்பு:
விகாராதிபதிக்கு வழங்கப்படும் கௌரவத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை விகாரை முன்பாக போராட்டம் நடத்தப்படும்.

🚨தீர்மானம் நிறைவேற்றம்:
இந்தத் தீர்மானங்கள் வலி வடக்கு பிரதேச சபையில் தேசிய மக்கள் சக்தியின் பூரண ஆதரவுடன் நிறைவேற்றப்பட்டுள்ளன.

🚨பின்னணி:
வலி வடக்குப் பிரதேச சபையின் மாதாந்த அமர்வில், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் உறுப்பினர் பத்மநாதன் சாருஜனால் கொண்டுவரப்பட்ட பிரேரணைகள் அனைத்து உறுப்பினர்களின் ஆதரவுடன் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டன. தையிட்டியில் அமைந்துள்ள "திஸ்ஸ விகாரை" சட்டவிரோதமானது என்றும், அதற்கு பிரதேச சபையில் எந்த அனுமதியும் பெறப்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

📢 போராட்டம் குறித்து:
எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை விகாரை முன்பாக நடைபெறும் போராட்டம் அரசியல் கட்சிகள் சாராத ஒரு மக்கள் போராட்டமாக முன்னெடுக்கப்படும் என தேசிய மக்கள் சக்தியினர் தெரிவித்துள்ளனர். மக்கள் போராட்டமாக இருக்குமானால் தாங்களும் கலந்துகொள்வோம் என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.

🚨கௌரவ நிகழ்வு:
தியிட்டி திஸ்ஸ விகாரையின் விகாராதிபதி ஜின் தோட்டை நந்தாராம தேரருக்கு அமரபுர ஶ்ரீ கல்யான வம்ச குழுவின் வட இலங்கை துணை தலைமை சங்கநாயக பதவிக்கான ஸ்ரீ சன்னாஸ் சான்றிதழ் மற்றும் விஜின் சான்றிதழ் வழங்கும் விழா எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை புத்தசாசன சமயம் மற்றும் கலாச்சார அமைச்சர் ஹினிதும சுனில் செனெவி தலைமையில் கொழும்பில் இடம்பெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.

#தைஇட்டி #தையிட்டிவிகாரை #யாழ்ப்பாணம் #தேசியமக்கள்சக்தி #சட்டவிரோதம் #போராட்டம் #இலங்கைஅரசியல்

02/12/2025

1996ல் வெளியான இந்தியன் படத்தில் ஒரு காட்சி. இந்தியன் தாத்தா ஒரு கொலை செய்துவிட்டு ஒரு கடிதம் எழுதுவார். அதில் உள்ள எழுத்து நடையை வைத்து கடிதத்தை எழுதியவர் சுதந்திர போரட்டகாலத்தை சேர்ந்த வயதானவர் ஒருவர் என சிபிஐ ஆபிசர் கண்டுபிடிப்பார்

1995

அமெரிக்காவை 18 ஆண்டுகளாக தபால் வழி குண்டுகள் அலைக்கழித்து வந்தன. யாரோ பல்கலைகழகங்களுக்கும், தொழில்நுட்ப நிறுவனங்களுக்கும் தபால் வழியே குண்டுகளை அனுப்பிக்கொண்டிருந்தார்கள். பார்சல்களை திறந்ததும் குண்டுகள் வெடித்தன. 18 வருடமாக நிகழ்ந்த சம்பவங்கள். பல மரணங்கள், நாடு முழுக்க கல்விநிறுவனங்களில் பார்சல்களை திறக்கவே பயந்தார்கள்

எந்த துப்பும் இல்லாத நிலையில், அந்த மர்ம நபருக்கு யுனபாம்பர் (Unabomber) என பெயர் வைத்தார்கள். யுனபாம்பர் கொடுத்த ஒரே க்ளூ அவன் விரிவாக எழுதிய கடிதங்களும், பிரகடனமும் தான். 35,000 பக்கத்துக்கு தொழில்நுட்பம், கல்வி வளர்ச்சிக்கு எதிராக அவன் ஒரு பிரகடனத்தை எழுதியிருந்தான். எழுதி நியூயார்க் டைம்சுக்கு அனுப்பியிருந்தான்

எந்த ஆதாரமும், துப்பும் இல்லாத நிலையில், அந்த பிரகடனத்தை ஆராய ஜார்ஜ்ட் டவுன் பல்கலைகழக மொழியியல் பேராசிரியர் ரோஜர் சூஹி என்பவரை அழைத்து வந்தார்

"பிரக்டனம் துளிகூட பிழையின்றி மிக உயர்தரமான ஆங்கிலத்தில் எழுதியுள்ளது. சாதாரண குற்றவாளி இப்படி எல்லாம் 35,000 பக்கத்துக்கு பிரகடனம் எழுதிக்கொண்டிருக்கமாட்டான். நீங்கள் தேடும் நபர் மிக பெரிய படிப்பு படித்தவர்"

போலிசுக்கு அதிர்ச்சி. குண்டுகளை இப்படி மிக துல்லியமாக வைப்பதாலும், விமான கம்பனி ஒன்றுக்கு குண்டுகளை அனுப்பியிருந்ததாலும் யுனபாம்பர் ஒரு மெகானிக் என அவர்கள் கருதி இருந்தார்கள். விமான கம்பனிகளின் மெகானிக்குகள் எல்லாம் தீவிர கண்கானிப்புக்கு உட்பட்டிருந்தார்கள். இப்ப அதெல்லாம் அவசியமில்லை

"பிரகடனம் முழுக்க அமெரிக்க ஆங்கிலத்தில் இல்லாமல் ப்ரிட்டிஷ் ஆங்கிலத்தில் உள்ளது. உதாரணமாக லைசென்ஸ் எனும் வார்த்தையில் எஸ் (License) என்பதை பயன்படுத்தாமல் சி (Licence) என்பதை பயன்படுத்துகிறார்கள். கருப்பர் என சொல்லாமல் நீக்ரோ என்ற 1960க்களின் வார்த்தைகளை பயன்படுத்துகிறார். இவர் நிச்சயமாக 1950க்களில் பள்ளிபடிப்பை முடித்தவராக இருக்கவேண்டும். 1960க்களில் கல்லூரிக்கு போயிருக்கவேண்டும். அப்படியானல் இவர் பிறந்தது 1950க்களில்..இப்போது ஆண்டு 1995. தோராயமாக ஒரு 40+ வயதுடையவரை தேடவேண்டும்.."

போலிஸ் இதை செய்தது 20 வயது இளைஞன் என கருதியிருந்தார்கள். அந்த கணிப்பும் வீண்

பேராசிரியர் இன்னும் ஒரு க்ளூவை கண்டுபிடித்தார்

"இந்த வட்டார நடையையும், இதில் பயன்படுத்தபடும் வார்த்தைகளையும் பார்த்தால், 1950க்களில் சிகாகோவில் வெளிவந்த சிகாகோ ட்ரிப்யூன் நாளிதழில் பயன்படுத்திய வார்த்தைகளையே பயன்படுத்துவது தெரிகிறது. க்ளூ (Clue) எனும் வார்த்தையை (clew) என எழுதுகிறார். பெண்களை குறிக்க "சிக்" (Chick) எனும் வார்த்தையை பயன்படுத்துகிறார். நீங்கள் தேடவேண்டிய நபர் சிகாகோவில் உள்ள 40+ வயதான ஒரு பெரிய படிப்பு படித்த கல்வியாளர்.."

நாடு முழுவதும் விரிக்கபட்ட வலை, அதன்பின் சிகாகோவில் விரிக்கபட்டது. அந்த பிரகடனத்தில் உள்ள பத்திகள் எப்பிஐ இணையதளத்தில் வெளியிடப்பட்டன. இந்த மாதிரி வித்தியாசமான எழுத்துநடை, பேச்சு நடை உள்ளவரை உங்களுக்கு தெரியுமா? தெரிந்தால் போலிஸுக்கு சொல்லுங்கள் என

சிகாகோவில் லின்டா பேட்ரிக் எனும் பெண் அதை படித்தார். அதில் உள்ள ஒரு வார்த்தை அவரது கவனத்தை ஈர்த்தது. "கூல் ஹெட்ட லாஜிசியன்" (Cool headed Logician) எனும் வார்த்தை. அதை அவரது கணவரின் தம்பி டெட் தான் அடிக்கடி பயன்படுத்துவார்

உடனே எப்பிஐ தொடர்புகொன்டார். இப்படி தினம் ஆயிரக்கணக்கில் எப்பிஐக்கு போன்வரும் என்றாலும் சிகாகோ, மத்திம வயது நன்றாக படித்தவர் என்றதும் எப்பிஅக்கு சுவாரசியம் கூடியது. டெட் ஒரு கல்லூரி பேராசிரியர்

டெட்டின் கடிதங்களை ரகசியமாக தேடி எடுத்தார்கள். அதில் "கேக்கை சாப்பிட்டுக்கொண்டே, அதை வைத்திருக்கவும் ஆசைப்பட கூடாது, டெட்" என எழுதியிருந்தது

யுனபாம்பரின் பிரகடனத்தில் இருக்கும் அதே வார்த்தைகள்

ஆனால் கைது செய்ய இது போதாது, நீதிபதியை அனுகி சர்ச் வாரண்ட் கேட்டார்கள். மொழியியல் ஆய்வுகளை சமர்ப்ப்பித்து "இதை முதன்மை ஆதாரமாக கொண்டு சர்ச் வாரண்ட் கொடுங்கள்" என கேட்க நீதிபதி "என்னப்பா உலக வரலாற்றில் இல்லாத புதுமையாக எழுத்து நடையை வைத்து எல்லாம் சர்ச் வாரண்ட் கேட்கிறீர்கள்" என கடிந்துகொண்டாலும் கொடுத்துவிட்டார்

சோதனையில் அனைத்து ஆதாரங்களும் சிக்கின. டெட் ஜெயிலுக்கு போனார்

"இது பர்பெக்ட் கிரைம். எந்த ஆதாரமும் இருக்ககூடாது என என் மூளையை பிரயோகித்தேன். கடையில் கூட வாங்காமல் மானைகொன்று, அதில் இருந்து நானே Glue தயாரித்து ஒட்டி எடுத்து குண்டுகளை தயாரித்தேன்....எப்படி பிடித்தீர்கள்?"

இத்தனை அறிவை விவரமாக பயன்படுத்த தெரியாமல் இப்படி முட்டாள்தனத்துக்கு பயன்படுத்தியதை என்னவென சொல்ல?



~ நியாண்டர் செல்வன்

27/09/2025

தலிபான்களின் காட்டாட்சி !

ஆப்கானிஸ்தானில் பெண்கள் எழுதிய அனைத்து நுல்களுக்குளுக்கும் தடை விதிக்கப்பட்டு அத்தனை படைப்புகளும் தீயிட்டு கொளுத்தப்பட்டுள்ளது. சுமார் 14 லட்சம் மாணவிகள் பாடசாலைகளிலிருந்து நீக்கப்பட்டுள்ளனர் . பெண்கள் முகத்தை காட்டுவதற்கு தடைவிதிக்கப்பட்டுள்ள ஒரு சூழ்நிலையில் அதற்கு அப்பால் அதாவது இசைக்கருவிகள் பாவிப்பதற்கு தடை, செஸ் விளையாடுவதற்கு தடை, பாடல்கள் கேட்பதற்கு தடை, தொலைகாட்சி பார்ப்பதற்கு தடை , திரைப்படங்கள் மற்றும் சமூக வலைத்தளங்கள் பார்ப்பதற்கு முற்றிலும் தடை . இதற்கு அப்பால் நடந்த கொடூர தலிபான்களின் காட்டாட்சியைத்தான் உலகம் பார்த்தது அண்மையில் அங்கு இடம்பெற்ற நில அதிர்வில் பூமியில் புதையுண்டவர்களின் சடலங்களை தோண்டி எடுக்கும்போது அந்த சடலங்கள் அருகில் பெண்களின் சடலங்கள் இருந்தால் அவற்றை தோண்டி எடுக்கக்கூடாது என்ற தடையும் விதிக்கப்பட்டது.

இதற்கு தலிபான்கள் சொல்லும் காரணம் இஸ்லாமில் சொல்லப்பட்டுள்ள சரிஹா " சட்டத்தை நாம் கடைப்பிடிக்கின்றோம் என்பதாகும். உலக நாடுகளின் வறுமை கோட்டுக்குக்கீழ் மிகவும் மோசமான பொருளாதாரத்திலிருந்து மீள முடியாமல் தவிக்கும் ஒரு சூழ்நிலையில் கற்காலம் நோக்கி பயணிக்கின்றது ஆப்கானிஸ்தான்.

25/09/2025

தாய்ப்பாசம்🥰🥰🥰

Want your public figure to be the top-listed Public Figure in Jaffna?
Click here to claim your Sponsored Listing.

Category

Telephone

Website

Address


Jaffna
40000