SharpLanka newspaper
06/06/2017
இலங்கை தொடர்பில் இந்தியா அவதானமாக இருக்க வேண்டும் என அறிவுறுத்தல்...
இலங்கை இந்தியா மற்றும் சீனா தொடர்பில் பின்பற்றுகின்ற வெளியுறவு கொள்கை தொடர்பில் இந்தியா அவதானத்துடன் செயற்பட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
த மொடர்ன்டிப்லோமெசியில் வெளியாகியுள்ள கட்டுரை ஒன்றிலே இந்த அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.
இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையில், கடற்றொழிலாளர் பிரச்சினை, ஜெனீவா பிரேரணை, அரசியல் யாப்பு உள்ளிட்ட பல்வேறு விடயங்களில் வேறுபாடுகள் நிலவுகின்றன.
எனினும் இந்தியா தமது வெளியுறவுக் கொள்கை வகுப்பின் போது இலங்கைக்கு முன்னுரிமை வழங்கப்படும் என்று தொடர்ந்து கூறி வருகிறது..
இந்த நிலையில், இந்தியா இது குறித்து அவதானமாக இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
06/06/2017
Click here to claim your Sponsored Listing.
Address
Colombo