Asian News

Asian News

Share

Watch Asian News anytime and anywhere on https://asiannews.lk/

Our Instagram Page: https://www.instagram.com/asiannews.lk/

Join Through Our WhatsApp Group : https://chat.whatsapp.com/KAACFnt4C0j4O4zz8JUe6s

08/06/2026

கட்டிலில் தன்னுடன் நித்திரை செய்த மகளை துஸ்பிரயோகம் செய்த தாய் மற்றும் கள்ளக்காதலனுக்கு 14 நாட்கள் விளக்கமறியல்

video link-

https://fromsmash.com/vPfmyiDsDA-dt

பாறுக் ஷிஹான்

கட்டிலில் தன்னுடன் நித்திரை செய்த மகளை கள்ளக்காதலனுடன் இணைந்து பலாத்காரமாக வாயை மூடி துஸ்பிரயோகம் செய்தமைக்காக தாய் மற்றும் கள்ளக்காதலனான சந்தேக நபர் இருவரையும் 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு கல்முனை நீதிவான் நீதிமன்று உத்தரவிட்டுள்ளது.

குறித்த சம்பவம் அம்பாறை மாவட்டம் கல்முனை தலைமையக பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நற்பிட்டிமுனை பகுதியில் 2026.03.24 அன்று இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.அத்துடன் 3 மாத காலமாக தலைமைறைவாகி இருந்த சந்தேக நபர் உட்பட சிறுமியின் தாய் ஆகியோர் கைது செய்யப்பட்டு கல்முனை நீதிமன்ற நீதிவான் முன்னிலையில் ஆஜர் செய்யப்பட்ட போது 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டார்.

50 வயது சந்தேக நபர் சமூக வலைத்தளங்கள் ஊடாக (IMO /WHATSAPP ) ஊடாக திருமணமான பெண் ஒருவருடன் தொடர்பினை மேற்கொண்டுள்ளார்.அப்பெண் தம்புள்ளை கலேவலை பகுதியைச் சேர்ந்தவராவார்.அப்பெண்ணிற்கு 2 பிள்ளைகள். ஆண் 18 மற்றும் 14 வயதுடைய பெண் இருக்கின்றனர்.இதன் போது அப்பெண் சமூக வலைத்தளம் ஊடாக தொடர்பு கொண்டு தனது 14 வயது பிள்ளையை தன்னுடன் அழைத்துக்கொண்டு அம்பாறை மாவட்டம் கல்முனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நற்பிட்டிமுனை பகுதிக்கு சென்றுள்ளார்.

அங்கு சந்தேக நபரான 50 வயது சந்தேக நபரான கள்ளக்காதலனை சந்தித்துள்ளார்.இதன்போது குறித்த தாயும் பிள்ளையும் தங்குவதற்காக வாடகைக்கு வீடு ஒன்று கிராம சேவகரின் உதவி ஊடாக பெறப்பட்டு அங்கு தங்கி இருந்துள்ளனர்.

குறித்த வாடகை வீட்டில் உள்ள ஒரு கட்டிலில் குறித்த மூவரும் உறங்கியதுடன் அவ்வேளை தாயுடன் கள்ளக்காதலன் உடலுறவில் நள்ளிரவில் ஈடுபட்டுள்ளார்.பின்னர் ஒரு சில மணித்தியாலங்களின் பின்னர் அருகில் இருந்த 14 வயது சிறுமியுடன் உடலுறவில் ஈடுபட்டிருந்தார்.இதன்போது அச்சிறுமி அபயக்குரல் எழுப்பி கத்தியபோது தாய் உடனடியாக செயற்பட்டு சிறுமியின் வாயினை பலவந்தமாக மூடியதுடன் கள்ளக்காதலனுக்கு ஒத்தாசை செய்துள்ளதாக அம்முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த முறைப்பாட்டிற்கமைய செயற்பட்ட பொலிஸார் சுமார் 3 மாதங்களின் பின்னர் தலைமைறைவாகி இருந்த 50 வயதான சந்தேக நபரை வாழைச்சேனை பொலிஸ் பிரிவில் உள்ள ஆலங்குளம் பகுதியில் 03.06.2026 அன்று கைது செய்துள்ளனர்.

பின்னர் தொடர் விசாரணையின் பிரதான சந்தேக நபரான கள்ளக்காதலன் உட்பட குறித்த செயற்பாட்டிற்கு கள்ளக்காதலனுக்கு உடந்தையாக இருந்த தாய் ஆகியோரை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவு பிறப்பித்திருந்தார்.

இச்சம்பவம் தொடர்பில் கல்முனை பிராந்திய உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் எம்.கே. இப்னு அசாரின் வழிகாட்டலில் கல்முனை பொலிஸ் நிலைய தலைமை பொறுப்பதிகாரி தலைமையில் செயற்பட்ட கல்முனை தலைமையக பொலிஸ் நிலைய சிறுவர் மற்றும் பெண்கள் பிரிவின் பொறுப்பதிகாரி திருமதி எஸ்.பி.என்.எம். சுவர்ணகாந்தி, உப பொலிஸ் பரிசோதகர் குமாரசிங்க, கல்முனை பொலிஸ் நிலைய சிறுவர் மற்றும் பெண்கள் பிரிவின் பொலிஸ் ஷார்ஜன் ஏ. ஆதம்பாவா(44138) மற்றும் சிறுவர் மற்றும் பெண்கள் பிரிவு உத்தியோகத்தர்கள் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் இச்சம்பவத்தில் பாதிக்கப்பட்ட சிறுமி வெளி மாவட்டம் ஒன்றில் உள்ள பாதுகாப்பான சிறுவர் நன்னடத்தை நிலையம் ஒன்றில் வைத்திய பரிசோதனைக்காக தங்க வைக்கப்பட்டுள்ளார். என்பதும் குறிப்பிடத்தக்கது.

08/06/2026

கத்தார் சிவில் விமானப் போக்குவரத்து ஆணையம் விடுக்கும் அறிவித்தல்....!

எஸ் ஜே புஹாது

கத்தார் நாட்டின் வான்வெளி மூடப்பட்டதாகவோ அல்லது விமான சேவைகள் நிறுத்தப்பட்டதாகவோ சமூக ஊடகங்களில் பரவி வரும் தகவல்கள் உண்மையல்ல என்று கத்தார் சிவில் விமானப் போக்குவரத்து ஆணையம் தெரிவித்துள்ளது.

மேலும், தற்போது அமலில் உள்ள விமான அறிவிப்பு (NOTAM) என்பது விமானப் போக்குவரத்து சேவைகள் பாதுகாப்பாகவும் தடையின்றியும் தொடர்வதற்காக மாற்று விமானப் பாதைகளை நிர்ணயிப்பதற்காக வெளியிடப்பட்டதாக ஆணையம் விளக்கியுள்ளது.

இது சர்வதேச தரநிலைகள் மற்றும் நடைமுறைகளுக்கு ஏற்ப மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையாகும்.

பொதுமக்கள் அதிகாரப்பூர்வ மூலங்களிலிருந்து மட்டுமே தகவல்களைப் பெற வேண்டும் என்றும், வதந்திகள் மற்றும் உறுதிப்படுத்தப்படாத தகவல்களை பகிர்வதைத் தவிர்க்க வேண்டும் என்றும் ஆணையம் கேட்டுக்கொண்டுள்ளது.

Photos from Asian News's post 07/06/2026

விபத்துகளைக் குறைப்போம்! உயிர்களைக் காப்போம்!!

#காயங்களைத் தடுப்பதற்கான வழிநடத்தல் குழுவின் உயர்மட்ட #கலந்துரையாடல்

எஸ் ஜே புஹாது

கல்முனை பிராந்தியத்தில் காயங்கள் மற்றும் விபத்துகளால் ஏற்படும் பாதிப்புகளை குறைக்கும் நோக்கில், காயங்களைத் தடுப்பதற்கான வழிநடத்தல் குழுவின் உயர்மட்ட கலந்துரையாடல் கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையில் இடம்பெற்றது.

கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி திருமதி சகீலா இஸ்ஸடீன் மற்றும் அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர் சார்பில் கலந்துகொண்ட உதவி திட்டப் பணிப்பாளர் எச்.பீ.அனீஸ் ஆகியோரின் இணைத்தலைமையில் இடம்பெற்ற இக்கூட்டத்தை, கல்முனை பிராந்திய தொற்றா நோய் தடுப்பு பிரிவின் பொறுப்பு வைத்திய அதிகாரி டொக்டர் ஏ.எஸ்.எம்.பௌசாத் ஒருங்கிணைப்பு செய்திருந்தார்.

சுகாதாரத் துறை, கல்வித் துறை, போக்குவரத்துத் துறை, பாதுகாப்பு துறை உள்ளிட்ட பல்வேறு அரச நிறுவனங்களின் தலைவர்கள் மற்றும் அதிகாரிகள் கலந்துகொண்ட இக்கூட்டத்தில், கல்முனை பிராந்தியத்தில் இடம்பெறும் காயங்கள் மற்றும் விபத்துகளைத் தடுப்பதற்கான செயற்திட்டங்கள் தொடர்பில் விரிவாக கலந்துரையாடப்பட்டது.

விபத்துகள் அதிகம் பதிவாகும் இடங்களை அடையாளம் கண்டு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வது, காயங்கள் தொடர்பான தரவுகளைச் சேகரித்து பகுப்பாய்வு செய்வது, அவசரகால முதலுதவி மற்றும் மருத்துவக் கவனிப்பு குறித்த பொதுமக்களின் விழிப்புணர்வை மேம்படுத்துவது ஆகிய விடயங்கள் குறித்தும் இங்கு ஆராயப்பட்டது.

மேலும், வீதிப் பாதுகாப்பை வலுப்படுத்துதல், குழந்தைகள் மற்றும் முதியோரின் பாதுகாப்பை உறுதிப்படுத்துதல், வீடுகளில் ஏற்படும் விபத்துகளைத் தடுத்தல் மற்றும் நீரில் மூழ்கி உயிரிழக்கும் சம்பவங்கள் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பிலும் கவனம் செலுத்தப்பட்டது.

காயங்களால் ஏற்படும் உயிரிழப்புகள் மற்றும் உடல் பாதிப்புகளைக் குறைக்கும் நோக்கில் பல்துறை ஒத்துழைப்புடன் ஒருங்கிணைந்த நடவடிக்கைகளை முன்னெடுப்பதன் அவசியம் பற்றி இக்கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

07/06/2026

விஷேட அதிரடிப் படையின் அத்தியட்சகர் துவான் பைசல் ஹஜ்

(அஷ்ரப் ஏ சமத்)

சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர்( STF) துவான் பைசல் ஹஜ்...

சிறப்பு அதிரடிப் படையில் பிறந்த ஒரு மாபெரும் அதிகாரி

சிறு குழுக்கள் என்ற கருத்தை அறிமுகப்படுத்தி, வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் பல நடவடிக்கைகளை வழிநடத்திய ஒரு துணிச்சலான விசேட அதிரடிப்படை வீரர்.

இவர் ஜனாதிபதி காவல்துறை வீர தீரச்செயல், காவல்துறை வீரதீரச் செயல் மற்றும் தேசபக்தர் வெற்றிப் பதக்கங்களை வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

Want your business to be the top-listed Media Company in Colombo?
Click here to claim your Sponsored Listing.

Telephone

Address


Colombo
32340