Dream Today
23/06/2021
*Who Will Cry When You Die?"*
ராபின் ஷர்மா எழுதிய புத்தகத்தில் உள்ள சில கருத்துக்கள்.
*அதாவது நீங்கள் இறந்த பின் யார் அழப் போகிறார்கள்? என்ற தலைப்பில் எழுதப்பட்ட இப்புத்தகத்தில்.
*“நீ பிறந்த போது, அழுதாய்...*
*உலகம் சிரித்தது..*.
*நீ இறக்கும் போது, பலர் அழுதால் தான் உன் ஆத்மா சாந்தியடையும்" என ஆரம்பிக்கும் ராபின் ஷர்மா, இந்த புத்தகத்தில் கூறும் அற்புத கருத்துக்களை காண்போம்...*
1. உங்கள் வாழ்க்கையில் நீங்கள் சந்திக்கும் ஒவ்வொரு நபரும் உங்களுக்கு ஏதோ ஒன்றை சொல்லி தருகின்றார். எனவே நீங்கள் சந்திக்கும் எல்லோரிடமும் கருணையுடன் இருங்கள்.
2. உங்களுக்கு எந்த விஷயத்தில் திறமை உள்ளதோ அதிலேயே கவனத்தையும், நேரத்தையும் அதிகம் செலுத்துங்கள். மற்ற விஷயங் களுக்காக அதிக நேரம் செலவழிக் காதீர்கள்.
3. அடிக்கடி கவலைப் படாதீர்கள். தேவை எனில் கவலை படுவதற்கென ஒவ்வொரு நாளும் மாலை நேரம் முப்பது நிமிடம் ஒதுக்குங்கள். அந்த நேரம் அனைத்து கவலைகள் குறித்து சிந்தியுங்கள்.
4. அதிகாலையில் எழப்பழகுங்கள்.
வாழ்வில் வென்ற பலரும் அதிகாலையில் எழுபவர்களே.
5. தினமும் நிறைய சிரிக்க பழகுங்கள். அது நல்ல ஆரோக்கியத்தையும், நண்பர்களையும் பெற்று தரும்.
6. நிறைய நல்ல புத்தகங்களை படியுங்கள். எங்கு சென்றாலும், பிரயாணத்தின் போதும் ஒரு புத்தகத்துடன் செல்லுங்கள். காத்திருக்கும் நேரத்தில் வாசியுங்கள்.
7. உங்கள் பிரச்சனைகளை ஒரு தாளில் பட்டியலிடுங்கள். இவ்வாறு பட்டியலிடும் போதே உங்கள் மன பாரம் கணிசமாக குறையும். அதற்கான தீர்வும் இதன் மூலம் கிடைக்கவும் வாய்ப்பு உண்டு.
8. உங்கள் குழந்தைகளை, உங்களுக்கு கிடைத்த மிக சிறந்த பரிசாக (Gift) நினையுங்கள். அவர்களுக்கு நீங்கள் தரக் கூடிய சிறந்த பரிசு, அவர்களுடன் நீங்கள் செலவிடும் நேரமே.
9. தனக்கு வேண்டியதை கேட்பவன் சில நிமிடங்கள் முட்டாளாய் தெரிவான். தனக்கு வேண்டியதை கேட்காதவன் வாழ் நாள் முழுவதும் முட்டாளாய் இருக்க நேரிடும்.
10. எந்த ஒரு புது பழக்கமும் உங்களுக்குள் முழுதும் உள் வாங்கி, அது உங்கள் வாடிக்கையாக மாற 21 நாட்களாவது ஆகும். ஆகவே தேவையான விஷயங்களை திரும்ப திரும்ப செய்யுங்கள்.
11. தினமும் நல்ல இசையை கேளுங்கள். துள்ளலான நம்பிக்கை தரும் இசை, புன்னகையையும் உற்சாகத்தையும் தரும்.
12. புது மனிதர்களிடமும் தயங்காது பேசுங்கள். அவர்களிடமிருந்து கூட உங்களை ஒத்த பல சிந்தனைகளும், நல்ல நட்பும் கிடைக்கலாம்.
13. பணம் உள்ளவர்கள் பணக்காரர்கள் அல்ல. மூன்று சிறந்த நண்பர்களை கொண்டவனே பணக்காரன்.
14. எதிலும் தனித்துவமாக இருங்கள். பிறர் செய்வதையே வித்தியாசமாக, நேர்த்தியாக செய்யுங்கள்.
15. நீங்கள் படிக்க துவங்கும் எல்லா புத்தகமும் முழுவதுமாய் படித்து முடிக்க வேண்டியவை அல்ல. முதல் அரை மணியில் உங்களை கவரா விட்டால் அதனை மேலும் படித்து நேரத்தை வீணாக்காதீர்கள்.
16. உங்கள் தொலை/கை பேசி உங்கள் வசதிக்காகத்தான். அது அடிக்கும் ஒவ்வொரு முறையும் நீங்கள் எடுத்து பேச வேண்டும் என்பதில்லை. முக்கியமான வேளைகளில் நடுவே இருக்கும் போது தொலை பேசி மணி அடித்தாலும் எடுத்து பேசாதீர்கள்.
17. உங்கள் குடும்பத்தின் முக்கிய நிகழ்வுகளை அவசியம் புகைப்படம் எடுங்கள். பிற்காலத்தில் அந்த இனிய நாட்களுக்கு நீங்கள் சென்று வர அவை உதவும்.
18. அலுவலகம் முடிந்து கிளம்பும் போது சில நிமிடங்கள் வீட்டிற்கு சென்றதும் மனைவி/ குழந்தைகளுக்கு என்ன செய்ய வேண்டுமென யோசியுங்கள்.
19. நீங்கள் எவ்வளவு வெற்றி அடைந்தாலும், எளிமையான (humble) மனிதராயிருங்கள்.
*வெற்றிகரமான பல மனிதர்கள் எளிமையான வர்களே!*
*"ஆணவம் ஆயுளைக் குறைக்கும்...*"
19/06/2021
பணமில்லாததால் மருத்துவம் பார்க்க வழியின்றி கணவரை நோய்க்குப் பறிகொடுத்த நான்கு பிள்ளைகளின் ஏழைத்தாய், மனிதநேய மருத்துவமனை கட்டி மகனையும் டாக்டர் ஆக்கியுள்ளார்!
ஐம்பது ஆண்டுகளாக உழைத்து 'மனித நேய மருத்துவமனை' என்ற பெயரில் பிரம்மாண்டமான கட்டிடங்களுடன் பொது மக்கள் நலனுக்காக அழகிய மருத்துவமனை உருவாக்கி சாதனை படைத்திருப்பவர் சுபாஷிணி மிஸ்திரி.மேற்கு வங்கத்துக்காரர்.இவரது வாழ்க்கையை அடிப்படையாக வைத்து வங்காள மொழியில் திரைப்படம் ஒன்றும் உருவாகி வருகிறதாம்.எந்தச் சூழல் சுபாஷிணியை மருத்துவமனை கட்ட வைத்தது? அவரே சொல்கிறார் :
"14 குழந்தைகள் உள்ள குடும்பத்தில் ஏழைத்தந்தைக்கு மகளாகப் பிறந்தவள் நான்.என்னை சந்திரா என்ற அன்றாட வேலை செய்து பிழைப்பு நடத்தும் ஏழை கூலித்தொழிலாளிக்குக் கட்டிக் கொடுத்தார்கள்.நான்கு குழந்தைகள் பிறந்தன.சிரம வாழ்க்கைதான்.அப்போது தான் அது நடந்தது. கணவர் கடுமையான வயிற்று வலியால் துடிதுடித்தார். அந்தக்காலத்தில் கிராமப்புறங்களில் அவ்வளவாக மருத்துவ வசதிகள் கிடையாது . அக்கம்பக்கத்தில் உள்ள மருத்துவமனைக்குப் போய் வர சரியான போக்குவரத்து வசதிகளும் கிடையாது. இருந்தும் கணவரை கொல்கத்தாவுக்கு அழைத்துச் சென்றேன்.மருத்துவர்கள் போதிய பணமில்லாததால் சிகிச்சை தர மறுத்து விட்டனர். மருத்துவக் கட்டணங்கள், பரிசோதனைக்குக் கட்டணங்கள் அதிகமாக இருந்ததால் என்னாலும் ஏதும் செய்ய முடியவில்லை.எனது கணவர் சந்திராவை குடல் நோய்க்குப் பறிகொடுத்தேன்.
இருபத்து மூன்று வயதிலேயே இதனால் விதவையானேன். அந்தச் சம்பவம் என்னை மிகுந்த பாதிப்புக்கு உள்ளாக்கியது. எனக்கு ஏற்பட்ட இழப்பு வேறு யாருக்கும் ஏற்படக் கூடாது என்று தீர்மானித்தேன். அதற்கு ஒரே வழி கிராமத்தில் வசதியுள்ள மருத்துவ மனையை நிறுவுவதுதான் என்று எனக்குப் பட்டது
ஏழை எளிய வசதியில்லாத மக்கள் மருத்துவமனையைப் பயன்படுத்தும் விதத்தில் மிகக் குறைந்த கட்டணம் அமைய வேண்டும். அந்த லட்சியத்தை நோக்கிச் செயல்பட ஆரம்பித்தேன். ஆனால்எனக்குப் படிப்பில்லை. என்னை நம்பி நான்கு வாரிசுகள். அவர்களுக்கு ஒரு வாய் சோறு கொடுக்க வேண்டும். இந்தச் சூழ்நிலையில் எனது லட்சியம் நிறைவேறுமா என்று என்னையே நான் கேட்டுக் கொண்டேன்.
வருமானத்திற்காக எந்த வேலையையும் செய்யத் தயாரானேன். மூத்த இரண்டு குழந்தைகளை அநாதை விடுதியில் சேர்த்துப் படிக்க வைத்தேன். சாலை ஓரத்தில் காய்கறி விற்க ஆரம்பித்தேன்.மூத்த மகன் காய்கறிகள் கடையில் எனக்கு உதவியாக இருந்தான்.அவனை கடையில் வைத்து விட்டு செங்கல் சுமப்பது போன்ற கூலி வேலைகளுக்கு நான் சென்றேன். இளைய மகன் அஜயை டாக்டருக்கு அவன் விரும்பியபடி படிக்க வைத்தேன். கொஞ்சம் கொஞ்சமாகச் சேமித்து சுமார் முப்பத்து மூன்று சென்ட் மனை ஒன்றை முதன் முதலாக வாங்கினேன்.
1993 - இல் அங்கே சின்ன தற்காலிகக் கீற்றுக் கொட்டகை அமைத்து மருத்துவமனை ஒன்றை முதன் முதலில் தொடங்கினேன். கிராமத்தைச் சேர்ந்தவர்களும் பணம் தந்து உதவினார்கள். கொல்கத்தா நகருக்கு அருகில் இருக்கும் எனது கிராமமான ஹன்ஸ்புக்காரில் ஒரு மருத்துவமனை அமைந்ததே பெரிய சாதனைதான்.
1996 - இல் மருத்துவமனைக்கான கட்டடம் உருவானது. அதற்கு 'மனிதநேய மருத்துவமனை' என்று பெயரிட்டேன். எனது கடைசி மகன் அஜய் நன்றாகப் படித்து டாக்டரானான். அவனது சேவையும் இப்போது எனது மருத்துவ மனைக்குக் கிடைத்து வருகிறது.
இப்போது பன்னிரண்டு டாக்டர்கள் மருத்துவமனையில் பணி புரிகிறார்கள். இங்கு பதிவுக் கட்டணம் வெறும் பத்து ரூபாய் மட்டுமே . முழுவதும் இலவசச் சிகிச்சை. சிக்கலான அறுவை சிகிச்சைகளுக்கு மட்டும் கட்டணம் அதிகபட்சமாக ஐந்தாயிரம் ரூபாய்.
இதேபோன்று சுந்தர்பன் பகுதியிலும் ஒரு மருத்துவமனையை இப்போதுத் தொடங்கியிருக்கிறேன்"
சுபாஷிணிக்கு இப்போது எழுபத்திரண்டு வயதாகிறது . இவரது சமூக சேவையைப் பாராட்டி 2018-ஆம் ஆண்டு 'பத்மஸ்ரீ விருது' குடியரசுத் தலைவரால் வழங்கப்பட்டது.
ஆனாலும், எப்போதும் போல ஒரு சாதாரண மனுஷியாக மருத்துவமனை வந்து அங்கு சிகிச்சை பெறும் நோயாளி
களுக்கு ஆறுதல், தேறுதல் சொல்லி,
குறைகள் ஏதும் உள்ளதா என்றும் கேட்டு
நிவர்த்தி செய்து வருவதே தமக்கு நிம்மதி தருவதாகச் சொல்கிறார் பழசை மறவாத இந்த ஏழைத்தாய்!
Click here to claim your Sponsored Listing.
Category
Website
Address
Colombo, Western
Colombo
01