Fazlullah Mubarak
கூக்குரல் நல்லதுதான் ஆனால் அது உணர்வோடு தானாக வரவேண்டும் தயார்படுத்தியபின் வரக்கூடாது
குயில் போல கூவினால் நல்லது … கைக்கூலிகள் போல் கூவினால் யார்க்கும் எந்த பிரயோசனமும் இல்லை … எதை சொன்னேன் என்று புரிந்ததா 😉
கருவறையை விடுங்கள் அது வேறு ஓர் அர்த்தத்தில் சொல்லப்பட்டது என்றாலும் இஸ்லாத்தில் தீவிரவாதம் இருக்கின்றது அல்லது கடும்போக்குவாதம் இருக்கின்றது என்று எப்படி அநுர சொல்லலாம் …
இஸ்லாம் என்ற பதம் அன்பாலும் பண்புகளாலும் பரவியது அதனை உதாரணத்திற்கேனும் விமர்சிக்க ஒருவருக்கும் அருகதையில்லை
ஒன்றும் வேண்டாம் அந்த அநுரவுடன் இருக்கும் முஸ்லிம் சகபாடிகளாவது கொஞ்சம் சொல்லிக் கொடுங்கள்
பேசுவதையெல்லாம் பேசிவிட்டு ஜம்இய்யதுல் உலமா வாசலில் காலடி வைத்தவுடன் இரட்சிப்பு கிடைத்துவிடாது
மட்டுமல்ல இன்று அஸ்ஸலாமு அலைக்கும் என்ற வார்த்தைப் பிரயோகத்தை வைத்து அரசியல் செய்யும் உங்கள் மேடைகளில் இருப்போர் அதன் அரத்தம் சமாதானத்தின் தூதுதான் என்பதையாவது அநுரவிடம் சொல்லுங்கள்
இதில் அவர்களுக்கு சார்பாக பேசுவதற்கு வேறு நம்மவர்கள் இருக்கிறார்கள் வெட்கமில்லையா
மஹிந்த திருடனாம், மைத்திரி திருடனாம் சந்திரிக்காவும் அப்படித்தானாம் ஏன் மைத்திரி ஆட்சியில் பிரதமராகவிருந்த ரணில் மிகப் பெரிய திருடனாம் இல்லையென்று நாங்களும் சொல்லவில்லை ஆனால் அவர்களை அரியணையமர்த்தியது யார்? அவர்களை ஆட்சிக்கு கொண்டு வந்தது யார் ? அவர்களை வெற்றிபெறச் செய்துவிட்டு பின்னர் திருடர்கள் என கூச்சலிடுவதில் என்ன எல்லாவற்றையும் மறந்துவிடச் சொல்கிறீர்களா ?
திருடர்களுடன் இணைந்து பணியாற்றிவிட்டு திருடன் என்று கூறாமல் முன்பே புலனாய்வு செய்து தனித்திருக்க ஏன் முடியவில்லை … பதில் இயலாமை
இனிமேல் திருட்டுத்தனத்தை மூலதனமாக்க அருகதையேயில்லை ஏனெனில் திருடுவதை விடவும் கொடியது திருட்டுக்குத் துணை போவது
இஸ்லாத்தில் தீவிரவாத கருத்துக்கள் உண்டு என்று நீங்கள் கூறுவதாக இருந்தால் இன்றிலிருந்து 30 ஆண்டுகளலவில் திருப்பிப் பார்த்தால் யார் தீவிரவாதி என்று தெரியும் நண்பர்களே
மக்கள் விடுதலை முன்்னணி செய்த 70-80 கால இனப்படுகொலைகள் மற்றும் சொத்து அழிப்புகள் மற்றும் சேதங்கள் பார்த்தால் யார் தீவிரவாதி என்பது புரியும்
எத்தனை புத்திஜீவிகள் கொலை செய்யப்பட்டார்கள்
எத்தனை பேரூந்துகள்
எத்தனை மின்இணைப்புகள்
இவையணைத்தும் தேசிய இழப்புகள் மட்டுமல்ல அதன் பெறுமதிகளை உற்றுநோக்கின் தேசிய பொருளாதார அழிவிக்கு இவைகளும் உசாத்துணைகள்தான்
ரணசிங் பிரேமதாஸவின் செழிப்பான ஆட்சி இன்றும் மெருகேறியிருக்கும் இந்த இரட்டை நிலைப்பாடுடையோர் இன்றியிருந்தால்
2019 இல் பேசிய பேச்சாக இருக்கலாம் ஆனால் பேச்சு சுத்தமாக இருக்க வேண்டும்
ஒரு குடம் பாலுக்கு ஒரு துளி விஷம் தான்
ஆதலால் மழைமேக மூட்டங்களுள் பிறை தேடாமல் தெளிவான வானத்தில் தென்படும் நிலவை ஒளியாக கொள்ளுங்கள்
சஜித் பிரேமதாஸ எனும் இனவாதமற்ற ஏழைகளின் தோழனை எம் சேவகனாக்குவோம் இனிமேல் தலைவர்கள் வேண்டாம்
29/06/2024
BREAKING NEWS | இலங்கை வந்து திடீரென காணாமற்போன இஸ்ரேல் பெண் | கிழக்கு மாகாணத்தில் தேடுதல் தீவிரம் 👉
BREAKING NEWS | இலங்கை வந்து திடீரென காணாமற்போன இஸ்ரேல் பெண் | கிழக்கு மாகாணத்தில் தேடுதல் தீவிரம் BREAKING NEWS | இலங்கை வந்து திடீரென காணாமற்போன இஸ்ரேல் பெண் | கிழக்கு மாகாணத்தில் தேடுதல் தீவிரம்
Click here to claim your Sponsored Listing.
Category
Address
Colombo