PadaKu TV

PadaKu TV

Share

30/04/2026

🥋 மட்டக்களப்பு கராத்தே வரலாற்றில் ஒரு மாபெரும் சாதனை! 🏆

மட்டக்களப்பு மாவட்டத்தின் கராத்தே துறையை வலுப்படுத்தும் நோக்கில், SKO கழகத்தின் தலைவர் கே.டி. பிரகாஷ் தலைமையில் கடந்த 25 & 26 ஆம் திகதிகளில் மட்டக்களப்பு மாநகர சபை உள்ளக அரங்கில் பிரம்மாண்டமான கராத்தே சுற்றுப்போட்டி வெற்றிகரமாக நடைபெற்றது.

🔥 1000+ மாணவர்கள் உற்சாக பங்கேற்பு
🔥 700+ வெற்றியாளர்களுக்கு பதக்கங்கள் & சான்றிதழ்கள்
🔥 திறமைகள், ஒழுக்கம், தன்னம்பிக்கை ஒரே மேடையில்!

மட்டக்களப்பு மாநகர ஆணையாளர் மற்றும் உதவி கல்விப் பணிப்பாளர் அவர்களால் மங்கள விளக்கேற்றி நிகழ்வு ஆரம்பிக்கப்பட்டது.

இரண்டு நாட்கள் முழுவதும் வயது பிரிவுகளின் அடிப்படையில் நடைபெற்ற போட்டிகளில் மாணவர்கள் தங்கள் திறமைகளை சிறப்பாக வெளிப்படுத்தினர்.

💪 கராத்தே துறையில் மட்டக்களப்பு மாவட்டத்தை முன்னணியில் கொண்டு செல்லும் SKO கழகத்தின் அர்ப்பணிப்பு பாராட்டத்தக்கது!

உடற்கல்வி ஆசிரியர்கள், விளையாட்டு அதிகாரிகள் மற்றும் பயிற்றுவிப்பாளர்கள் கலந்து கொண்டு நிகழ்வை சிறப்பித்தனர்.

🌟 இந்நிகழ்வு மாவட்ட விளையாட்டு வளர்ச்சிக்கு புதிய உற்சாகத்தை அளித்துள்ளது!

20/04/2026

சில்லிக்கொடியாறு பராசக்தி விளையாட்டுக்கழகத்தின் பந்துச்சமர் 2026.

17/04/2026

சிறை மாற்றக் கோரி சந்திரகாந்தன் உண்ணாவிரதம்: மட்டக்களப்பில் ஆதரவு தெரிவித்து கவனயீர்ப்பு போராட்டம்.

கடந்த ஒரு வருட காலமாக குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் விசாரணைப் பிரிவில் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டிருந்த சந்திரகாந்தன், கடந்த ஏப்ரல் 2ஆம் திகதி கல்கிசை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டார். இதன்போது, சட்ட மா அதிபரின் ஆலோசனை கிடைக்கும் வரை அவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதனைத் தொடர்ந்து, அன்றைய தினமே வெலிக்கடைச் சிறைச்சாலைக்கு மாற்றப்பட்ட அவர், பாதுகாப்பு காரணங்களுக்காக அடுத்த நாளே கண்டி தும்பறைச் சிறைச்சாலைக்கு மாற்றப்பட்டார். பின்னர், மீண்டும் கடந்த ஞாயிற்றுக்கிழமை (ஏப்ரல் 12) வெலிசர சிறைச்சாலைக்கு அவர் இடமாற்றம் செய்யப்பட்டார்.
தற்போது வெலிசர சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தனக்கு, ஒரு சாதாரண கைதிக்கு வழங்கப்பட வேண்டிய அடிப்படை உரிமைகள் கூட மறுக்கப்படுவதாக சந்திரகாந்தன் குற்றம் சுமத்தியுள்ளார். இதனை எதிர்த்தும், தன்னை இலங்கையிலுள்ள வேறு ஏதேனும் ஒரு சிறைச்சாலைக்கு மாற்றுமாறு கோரியும் அவர் கடந்த ஆறு நாட்களாகத் தொடர்ச்சியான உணவு தவிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றார்.
இந்நிலையில், அவரது போராட்டத்திற்கு வலுச்சேர்க்கும் வகையில், இன்றைய தினம் மட்டக்களப்பு காந்தி பூங்காவில் அகிம்சை வழியிலான கவனயீர்ப்புப் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களும், கட்சியின் ஆதரவாளர்களும் ஒன்றிணைந்து இந்தப் போராட்டத்தை முன்னெடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

16/04/2026

வெளிக்கடை சிறைச்சாலையின் வைத்திய சாலையில் சிவ.சந்திரகாந்தன் அனுமதி...... தொடரும் உணவு தவிர்ப்பு போராட்டம்

Want your business to be the top-listed Media Company in Batticaloa?
Click here to claim your Sponsored Listing.

Address


91 Lake Road
Batticaloa
30000