Yaakkai
Intensity doing Research, Documenting, Create Awareness and Conservation of heritage sites in south India. We have a volunteers team of retired Archeological officers, Epigraphists, Language research fellows and interested students, youngsters to do effectively. It registered with Tamilnadu state government, (48/2020:IV/26) for strengthen heritage. This Yaakkai Charitable Trust hereafter referred as Yaakkai.
18/05/2026
தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் அறம் கிளையின் சார்பில் வழங்கப்பெறும் சிறந்த தொல்லியல் ஆய்வு நூலுக்கான "சே. அருண்குமார் நினைவுத் தொல்லியல் விருது - 2025" நீலமலைத் தொல்லியல் நூலுக்கு வழங்கப்பட்டது. கடந்த சனிக்கிழமை (16-05-26) அன்று சென்னையில் நடைபெற்ற நிகழ்வில், நூலாசிரியர்கள் திருமிகு குமரவேல் இராமசாமி, சுதாகர் நல்லியப்பன் ஆகிய இருவரும் இணைந்து விருதினைப் பெற்றுக்கொண்டனர். இவ்விருது பாராட்டுச் சான்றிதழ் உடன் ரூபாய் பத்தாயிரம் பணம் பரிசு கொண்டதாகும்.
இவ்விருதினை வழங்கிய த. மு. எ. க. ச அறம் கிளையின் நண்பர்களுக்கு மனமார்ந்த நன்றிகள். உடன் பயணிக்கும் யாக்கை நண்பர்கள் அனைவருக்கும் இவ்விருது சமர்ப்பணம்.
15/05/2026
தொல்லியல் அறிஞர் முனைவர் அர. பூங்குன்றன் அவர்களுடன், யாக்கை தொல்லியல் நூலகத்தில் கல்வி உள்ளகப் பயிற்சி பெற்றுவரும் மாணவர்கள் உரையாடும் நிகழ்வு நடைபெற்றது.
"பண்டைய நூலகங்கள்" எனும் தலைப்பில் மாணவர்களுடன் தமது கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டார்.
வெவ்வேறு கல்வி நிலையங்களில் இருந்து வந்திருக்கும் மாணவர்கள் தொல்லியல் மீதான தங்களது ஐயங்களை அவரிடம் கேட்டுத் தெளிவு பெற்றனர்.
இந்நிகழ்வை நமது யாக்கை அறக்கட்டளை ஒருங்கிணைத்தது.
11/04/2026
சென்னைப் பல்கலைக்கழகம் தமிழ் இலக்கியத்துறையில் நீலமலைத் தொல்லியல் நூல் அறிமுக விழா நடைபெற்றது. தமிழ்த் துறையின் தலைவர் பேரா. கோ. பழனி அவர்கள் வரவேற்புரை வழங்கினார்கள். அவரது வரவேற்புரை நூல் குறித்த மதிப்பீடு வழங்கும் உரையாகவே அமைந்தது. சிறப்பு விருந்தினர் தொல்லியல் ஆய்வாளர் முனைவர் மார்க்சிய காந்தி அவர்கள் நூலின் ஒவ்வொரு இயலையும் நுணுக்கமாக வாசித்து மிக விரிவான மதிப்பீடுகள் வழங்கி உரையாற்றினார். முனைவர் க. த. காந்திராஜன் அவர்கள், பாறை ஓவியங்கள் துறையின் நீண்ட அனுபவங்களை பகிர்ந்து கொண்டதோடு நீலமலையின் தொல்லியலை ஆவணப்படுத்தியிருப்பதன் தேவையைக் குறிப்பிட்டு பேசினார். நூலாசிரியர்கள் குமரவேல் இராமசாமி, சுதாகர் நல்லியப்பன் ஆகியோர் ஏற்புரை வழங்கினர். முதுகலை இரண்டாம் ஆண்டு மாணவி செல்வி கு. ஐஸ்வர்யா நிகழ்வை சிறப்பாக ஒருங்கிணைந்து தொகுத்து வழங்கினார். முதுகலை முதலாமாண்டு மாணவர் கி. ராம்கார்த்திக் நன்றியுரை வழங்கினார்.
நீலமலைத் தொல்லியல் நூல் அறிமுகக் கூட்டத்தை சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ்த் துறையில் நிகழ்த்த என்று விரும்பி அதற்கான செயல்திட்டத்தை முன்னெடுத்த நண்பர்கள் ச. ந. விக்னேஷ், முனைவர் குணசேகரன் ஆகியோருக்கு நம் அன்பும் நன்றியும். இந்நிகழ்விற்கு பல்வேறு வகைமைகளில் உதவிய நண்பர்கள், சிறப்பு விருந்தினர்கள், மாணவர்கள் அனைவருக்கும் நம் நன்றிகள்.
Click here to claim your Sponsored Listing.
Category
Contact the organization
Telephone
Website
Address
Near SPK Enterprises, FCI Road, Opp. Rajagopal Transport, Varatharajulu Nagar, Ganapathy
Coimbatore
641006