Kshatriyas - The Ruler

Kshatriyas - The Ruler

Share

13/05/2026

ஐயா சி.என். இராமமூர்த்தி அவர்களின் அறிக்கை:

அனைத்து உறவுகளுக்கும் வணக்கம்.

தமிழ்நாட்டின் ஜனநாயக மரபை உயர்த்தும் புதிய பொறுப்பு!
தமிழகச் சட்டப்பேரவையின் சபாநாயகராக தேர்வு செய்யப்பட்டுள்ள நண்பர் ஜே.சி.டி. பிரபாகரன் அவர்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
சட்டப்பேரவை என்பது ஜனநாயகத்தின் இதயம். அந்த உயரிய அவையின் ஒழுக்கம், கண்ணியம் மற்றும் மக்கள் நலக் கருத்துகளை சமநிலையுடன் வழிநடத்தும் பொறுப்பே சபாநாயகர் பதவி. அந்த முக்கியமான பொறுப்பிற்கு தகுதியும் அனுபவமும் கொண்ட நண்பர் ஜே.சி.டி. பிரபாகரன் அவர்கள் தேர்வு செய்யப்பட்டிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது.
அவரது பணிக்காலத்தில் தமிழக மக்களின் நலனும், ஜனநாயக மரபுகளும் மேலும் வலுப்பெற வேண்டும் என மனமார வாழ்த்துகிறேன். அரசியல் வேறுபாடுகளை கடந்து அனைவரையும் சமமாக அணுகி சட்டப்பேரவையை சிறப்பாக நடத்திட அவர் வெற்றி பெற இறைவனை பிரார்த்திக்கிறேன்.
மக்கள் நலப் பயணத்தில் தொடர்ந்து உயர்ந்த சாதனைகள் படைக்க நண்பர் பிரபாகரன் அவர்களுக்கு என் அன்பும் ஆதரவும் என்றும் உண்டு.

— சி. என் இராமமூர்த்தி
நிறுவனத் தலைவர்,
அனைத்திந்திய பாட்டாளி முன்னேற்றக் கட்சி.

23/04/2026

இன்று சென்னை லயோலா கல்லூரியில் அனைவருக்கும் அனைத்து உரிமையும் சமூகநீதிப்படி கிடைக்க அறிவாயுதம் ஏந்தி (Fight Intellectually) சட்டப்படி போராடும் தொடர்போராட்ட போராளி ஐயா சி.என் இராமமூர்த்தி அவர்கள் தனது வாக்கை செலுத்தி ஜனநாயக கடமையை செய்த தருணம்!.

14/04/2026

ஐயா பொன்பரப்பி கிருஷ்ணமூர்த்தி அவர்கள் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.

Want your organization to be the top-listed Non Profit Organization in Chennai?
Click here to claim your Sponsored Listing.

Website

Address


Chennai
600003