MPT BOSS

MPT BOSS

Share

11/10/2025

இஸலாத்தில் பெண்கள் பர்தா அணியும்பொழுது முகம் மறைக்கக்கூடாது என்பது இதற்காகதான்......
கேரள மாநிலம் காசற்கோடு ,மலப்புரம் பகுதிகளில் வடமாநிலங்களை சேர்ந்த சிலபேர் பர்தா அணிந்து திருட்டு வேளைகளில் ஈடுபடுகின்றனர்.இதுபோன்றவர்கள் பிடிபட்ட காணொளி நிறைய வருகின்றன, இஸ்லாத்திற்கு களங்கம் ஏற்படுத்துவதாக அப்பகுதி மக்கள் போலிஸில் குற்றம்சாட்டியுள்ளனர்,
பிடிபட்டவுடன் வெளுத்து வாங்கியபோது எடுத்த காட்சிதான் இவை..
நஸீர் MPT.....

10/10/2025

சினிமா காட்சிகளில் சில உண்மைகள் இப்படி ஊடாலாக வந்துபோகும் , நாம் அதை கவனிக்கமாட்டோம்......

10/10/2025

4 நாட்களாகியும் நகராத டிராபிக்!!!நாட்டின் முக்கிய நெடுஞ்சாலைகளில் ஒன்றான தேசிய நெடுஞ்சாலை 13ல் மிக மோசமான டிராபிக் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.4 நாட்களாக இந்த டிராபிக் பாதிப்பு தொடரும் நிலையில், 65 கிமீ தூரத்திற்கு வாகனங்கள் அணிவகுத்த நிற்கின்றன. இந்தளவுக்கு டிராபிக் மோசமாக என்ன காரணம்.. இது எப்போது சீராகும் என்பது குறித்து நாம் பார்க்கலாம்.நமது நாட்டில் சில சாலைகளில் திடீரென டிராபிக் நெரிசல் ஏற்பட்டு, பல மணி நேரம் வரை சாலையில் காத்திருக்கும் சூழல் ஏற்படுகிறது. அப்படியொரு மோசமான டிராபிக் நெரிசல் தான் பீகாரில் ஏற்பட்டுள்ளது. டெல்லி- கொல்கத்தா நகரங்களை இணைக்கும் தேசிய நெடுஞ்சாலை 19ல் பீகாரில் தான் இந்த டிராபிக் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.இதனால் அங்குச் சுமார் நான்கு நாட்களாக வாகனங்கள் ஸ்தம்பித்துள்ளன. சுமார் 60 கிமீ வரை நீண்டுள்ள இந்த டிராபிக் நெரிசலால் பல நூறு வாகனங்கள் பம்பர்-டு-பம்பர் டிராபிக்கில் சிக்கி நிற்கின்றன. இப்போதைய சூழலில் இந்தச் சிக்கலுக்குத் தீர்வு கிடைப்பது போலத் தெரியவில்லை.கடந்த வெள்ளிக்கிழமை ரோத்தாஸ் மாவட்டத்தில் பெய்த கனமழையே இதற்குப் பிரதானக் காரணமாகும்.. அந்த நெடுஞ்சாலையில் கட்டுமான பணிகள் நடந்து வரும் நிலையில், மழை நிலைமையை மோசமாக்கியது. இந்தக் கனமழையால் மாற்றுப்பாதைகள் மற்றும் சர்வீஸ் சாலைகள் வெள்ளத்தில் மூழ்கின. இதனால் சாலைகள் எங்கும் பள்ளங்கள் ஏற்பட்டு, தண்ணீர் தேங்கியுள்ளது. இதனால் வாகனங்கள் நகர முடியாமல் திணறுகின்றன. ஒவ்வொரு மணி நேரமும் போக்குவரத்து நெரிசல் அதிகரித்துக் கொண்டே வருகிறது.சில கிலோமீட்டர் தூரத்தைக் கடக்கக் கூட பல மணிநேரம் ஆகிறதாம். இந்தப் போக்குவரத்து நெரிசல் ரோத்தாஸ் நகரத்திலிருந்து சுமார் 65 கி.மீ தொலைவில் உள்ள அவுரங்காபாத் வரையிலும் நீண்டுள்ளது.
சைட் கேப்பில் மைசூருக்கு அடித்த லக்
நிலைமை இந்தளவுக்கு மோசமாக இருந்தாலும் கூட இந்த மாபெரும் போக்குவரத்து நெரிசலைத் தீர்க்க உள்ளூர் நிர்வாகம் எந்தவொரு முயற்சியையும் எடுக்கவில்லை என்றே தெரிகிறது. தேசிய நெடுஞ்சாலை ஆணையமும் இதில் தலையிடவில்லை. சாலை போடும் சம்பந்தப்பட்ட நிறுவனமும் இதைக் கண்டுகொள்ளவில்லை. இப்படி எந்தவொரு தரப்பும் நடவடிக்கை இல்லாமல் வேடிக்கை பார்ப்பதால் நிலைமை மோசமாகிறது.ஒவ்வொரு மணி நேரமும் டிராபிக் பாதிப்பு மோசமாகிக் கொண்டே இருப்பதால் வாகனங்கள் நத்தை வேகத்திலேயே ஊர்ந்து செல்கிறது. வெறும் ஐந்து கிலோமீட்டர் தூரத்தைக் கடக்கவே கூட 20 மணி நேரத்திற்கு மேல் ஆவதாக வாகன ஓட்டிகள் புலம்புகிறார்கள்.இது தொடர்பாகப் போக்குவரத்து நெரிசலில் சிக்கியுள்ள லாரி ஓட்டுநர் பிரவீன் சிங் கூறுகையில், "கடந்த 30 மணி நேரத்தில் வெறும் 7 கிலோமீட்டர் மட்டுமே பயணித்துள்ளோம். சுங்கக்கட்டணம், சாலை வரி மற்றும் பிற கட்டணங்கள் முறையாகச் செலுத்துகிறோம். ஆனாலும், இதுபோன்ற டிராபிக் பிரச்சனைகள் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. தேசிய நெடுஞ்சாலை ஆணைய அதிகாரிகளோ அல்லது உள்ளூர் நிர்வாகமோ இதைச் சரி செய்ய எந்தவொரு முயற்சியும் எடுக்கவில்லை" என்றார்.மற்றொரு லாரி ஓட்டுநர் சஞ்சய் சிங் இது குறித்து, "இரண்டு நாட்களாகப் போக்குவரத்து நெரிசலில் சிக்கித் தவிக்கிறோம். ஒரு சில கிலோமீட்டரைக் கடக்கவே பல மணிநேரம் ஆகிறது.. உணவு தண்ணீர் கிடைப்பதிலும் சிரமம் இருக்கிறது" என்று கூறினார்.டிராபிக் நெரிசல் ஏற்பட்டுள்ள டெல்லி- கொல்கத்தா ரூட் மிகவும் முக்கியமானது. இதில் பல வாகனங்கள் விரைவில் கெட்டுப்போகக்கூடிய காய்கறி, பழங்கள் உள்ளிட்ட சரக்குகளை ஏற்றி வருகிறது. இதனால் அவை கெட்டுப்போனால் வர்த்தகர்களுக்குக் கடும் கஷ்டம் ஏற்படும் என அஞ்சப்படுகிறது. இது மட்டுமின்றி ஆம்புலன்ஸ்கள், அவசர சேவை வாகனங்கள் மற்றும் சுற்றுலா வாகனங்களும் கூட இந்த நெரிசலில் சிக்கியுள்ளது. இது மக்களை கவலை பட செய்துள்ளது.

Photos from MPT BOSS's post 09/10/2025

இந்த ரெண்டு பன்னாடைகளும் யார் எதச்சொன்னாலும் மைக் தூக்கிட்டு ஓடிபோயி அவங்க முன்னாடி நின்னுறது.....

09/10/2025

ஆப்கானிஸ்தானில் இந்தியாவைச் சேர்ந்த சுற்றுலா பயணி ஒருவர் காபுல் நகருக்கு செல்வதற்காக அனுமதி கேட்கிறார்.
அதற்கு தாலிபன்கள் சொல்லும் பதிலை கேளுங்கள்.

09/10/2025

நீரில் மூழ்கி அண்ணன் தம்பி இறப்பு......

திருவண்ணாமலை மாவட்டம்
சேத்துப்பட்டு எனும் ஊரைச்சேர்ந்த யுவராஜ் ( 14 ), திஷாந்த் ( 8 ) அண்ணன் தம்பி ஆவர். இருவரும் அங்குள்ள ஏரியில் மீன்பிடிக்க முயலும்போது ஏரி நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்....
சிறுவர்கள் எங்கு சென்றாலும் கண்கானியுங்கள்,
நஸீர் MPT.....

08/10/2025

அக்டோபர் 26 முதல் ரியாத் ஏர் சேவை துவக்கம்

......

08/10/2025

சவுதி அரேபியா முதல் நோபல் பரிசை பெற்றது

.

08/10/2025

அடுத்த சூப்பர் ஸ்டார் என்று கட்டுரை எழுதிய அதே குமுதம் தான்
இன்னிக்கு இதை Cover Story ஆக வெளியிடுகிறது....

வாழ்க்கை ஒரு வட்டம் என்று விஜய் பேசிய டயலாக் அவருக்கு இன்று பொருந்துவது தான் நகை முரண்...

காலம் பேசாது
ஆனால்
காலம் பதில் சொல்லும்

🤷‍♂️🤷‍♂️

08/10/2025

நாம் என்ன சோதனை எலிகளா ?....
உங்களுக்கு இது செய்தி, எங்களுக்கு இது மிகப்பெரிய இழப்பு .

Want your public figure to be the top-listed Public Figure in Doha?
Click here to claim your Sponsored Listing.

Category

Website

Address

Doha
Doha