Ceylon Times Network
26/06/2026
ஞானசார தேரர் மீதான வழக்கு மீண்டும் ஒத்திவைப்பு
இஸ்லாமிய மதத்தை அவமதிக்கும் வகையில் கருத்து வெளியிட்டு, இனங்களுக்கு இடையிலான நல்லிணக்கத்தை சீர்குலைக்க முயன்ற குற்றச்சாட்டில் குற்றவாளியாகக் காணப்பட்ட பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரருக்கு எதிரான வழக்கு, ஜூலை 31ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளதாக கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
வழக்கை விசாரிக்கும் நீதிபதி விடுமுறையில் இருந்ததால், வழக்கு இன்று மற்றொரு மேல் நீதிமன்ற நீதிபதி முன்னிலையில் எடுத்துக்கொள்ளப்பட்டது.
இதன்போது, முன்-விசாரணைக்காக வழக்கை ஜூலை 31ஆம் திகதிக்கு ஒத்திவைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.
Click here to claim your Sponsored Listing.