USF Media Network

USF Media Network

Share

Photos from USF Media Network's post 24/02/2024

இவரைக் காணவில்லை, கண்டுபிடிக்க உதவுங்கள்!

கல்முனையை சேர்ந்த M.I. உதுமா லெப்பே என்பவர் கொழும்பு மருதானையில் காணாமல் போய் உள்ளார் - இவர்பற்றி தகவல் தெரிந்தவர்கள் அறிவிக்கவும்.*

கல்முனையை பிறப்பிடமாகக் கொண்ட M.I. உதுமாலெப்பை என்பவர் நேற்று(2024/02/20) மாலை 6 மணியில் இருந்து கொழும்பு - மருதானை K.L.I. Lodge இல் வைத்து காணாமல் போயுள்ளார். இவரை யாரேனும் கண்டால் உடனடியாக பின்வரும் தொலைபேசி இலக்கத்திற்கு அறியத் தாருங்கள் 0775728170 / 0754189110

*காணாமல் போனபோது வெள்ளை சாரம், லைட் கிரீன் கலர் சேட் மற்றும் தொப்பி அணிந்து இருந்தார்.

Photos from USF Media Network's post 27/02/2023

ஊடகவியலாளர் றியாத் ஏ. மஜீத் சமுர்த்தி கருத்திட்ட முகாமையாளராக பதவியுயர்வு பெற்று உயர் அதிகாரிகள் முன்னிலையில் தனது கடமைகளை பொறுப்பேற்றார் !

நூருல் ஹுதா உமர்

சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தராக, உதவி முகாமையாளராக கடமையாற்றிய ஊடகவியலாளர் றியாத் ஏ. மஜீத் சமுர்த்தி கருத்திட்ட முகாமையாளராக பதவியுயர்வு பெற்று தனது கடமைகளை பொறுப்பேற்கும் நிகழ்வு சமுர்த்தி வங்கிச் சங்க முகாமைத்துவ பணிப்பாளர் ஏ எல்.யூ. ஜூனைதாவின் நெறிப்படுத்தலில் சாய்ந்தமருது சமூர்த்தி வங்கியில் இன்று (27) சாய்ந்தமருது பிரதேச செயலக தலைமைப் பீட சிரேஷ்ட சமுர்த்தி முகாமையாளர் ஏ.சீ.ஏ.நஜீம் தலைமையில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் கிழக்கு மாகாண பிரதி பிரதம செயலாளரும், சாய்ந்தமருது பிரதேச செயலகத்தின் ஸ்தாபக பிரதேச செயலாளருமான ஏ.மன்சூர், அம்பாறை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் வி.ஜெகதீஸன், கல்முனை பிரதேச செயலாளர் ஜே.லியாகத் அலி, சாய்ந்தமருது பிரதேச செயலாளர் எம்.எம். ஆஷிக், சாய்ந்தமருது உதவி பிரதேச செயலாளர் எம்.ஐ.முவஃபிக்கா, கணக்காளர் நுஸ்ரத் பானு, கல்முனை, சாய்ந்தமருது, நிந்தவூர் பிரதேச செயலகங்களின் தலைமைப் பீட சிரேஷ்ட சமுர்த்தி முகாமையாளர்கள், பிரதேச செயலக உயர் அதிகாரிகள், சமூர்த்தி வங்கி உத்தியோகத்தர்கள், சிலோன் மீடியா போரத்தின் நிர்வாகத்தினர் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.

இவர் சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தராக 1996.03.04 ஆம் திகதி கல்முனை பிரதேச செயலகத்தில் முதல் நியமனம் பெற்று சாய்ந்தமருது - 14 ஆம் பிரிவில் 3 வருடங்கள் சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தராக கடமையாற்றினார். பின்னர் சாய்ந்தமருது உப பிரதேச செயலகம் 1999 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டதனால் அதில் கடமையாற்றினார். அதனைத் தொடர்ந்து சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தினால் நாடளாவிய ரீதியில் ஆரம்பிக்கப்பட்ட சமுர்த்தி வங்கிச் சேவை 2001 ஆம் ஆண்டு சாய்ந்தமருதில் திறந்து வைக்கப்பட்ட போது அதில் ஸ்தாபக உதவி முகாமையாளராக நியமிக்கப்பட்டு சுமார்16 வருடங்கள் கடமையாற்றியுள்ளார்.

அவரது காலப்பகுதியில் சமுர்த்தி வங்கி பல்வேறு முன்னேற்றங்களை அடைந்துள்ளது. பின்னர் சாய்ந்தமருது சமுர்த்தி வலயத்தின் உதவி முகாமையாளராக 5 வருடங்கள் சிறப்பாக கடமையாற்றியுள்ள இவர் அதனை தொடர்ந்து சாய்ந்தமருது சமுர்த்தி மகாசங்கத்தின் உதவி முகாமையாளராக நியமிக்கப்பட்டு 7 மாதங்கள் கடமையாற்றிய நிலையில், தனது பட்டப் படிப்பை நிறைவு செய்ததன் மூலம் இன்று சமுர்த்தி கருத்திட்ட முகாமையாளராக பதவியுயர்வு பெற்றுள்ளார். இவர் சிலோன் மீடியா போரம் ஊடக அமைப்பின் தலைவராகவும் செயற்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Photos from USF Media Network's post 11/02/2023

சாய்ந்தமருதில் அஹதியா பாடசாலைகளை முன்னேற்றுவது சம்மந்தமான மீளாய்வுக் கூட்டம்

(அ.கபூர். அன்வர்)

சாய்ந்தமருதில் அஹதியா பாடசாலைகளை முன்னேற்றுவது சம்மந்தமான மீளாய்வுக் கூட்டம் சாய்ந்தமருது தாறுல் குரர் ஆனியா அஹதியா சம்மேளனத்தின் தலைவர் அஷ் செய்க் ஏ.எம்.அன்ஸார் தலைமையில் (11 ) அல் ஹிலால் வித்தியாலய கூட்டப மண்டபத்தில் இடம்பெற்றது.

இக் கூட்டத்திற்கு அல் ஹிலால் அஹதிய்யா பாடசாலை, அஸ் சபீனா அஹதிய்யா பாடசாலை மற்றும் தாறுல் குர்ஆனியா அஹதிய்யா பாடசாலை ஆசிரியர்கள் நிர்வாகத்தினர் கலந்து கொண்டிருந்தனர்

சாய்ந்தமருதில் அஹதிய்யா பாடசலைகள் ஆரம்பித்து 30 வருடமாகியும் அஹதியா பாடசாலையின் முக்கியத்துவம் இன்னும் விளங்காத மாணவ சமூகமக காணப்படுகிறார்கள். தற்கால மாணவ மாணவிகளில் பலர் மார்க்கக் கல்வியை சீராக கற்று அதன்படி நடந்து கொள்ளாததன் காரணமாக பல்வேறு வேண்டப்படாத சிக்கல்களுக்குள் சிக்கித்தவிக்கும் நிலை உருவாகியுள்ளதாகவும் இங்கு கருத்துக்கள் முன்வைக்கப்பட்டன.

ஞாயிற்றுக் கிழமைகளில் இடம்பெறும் அவர்களது சமயம் சார்ந்த அஹதிய்யா பாடசாலைகளில் இணைந்து கொண்டு மார்க்க ரீதியான கல்வி உள்ளிட்ட அறிவைப் பெற முஸ்லிம் மாணவர்கள் அஹதிய்யா பாடசாலைகளை பயன்படுத்த முன்வரவேண்டும் என்று கேட்டுக்கொண்டனர்.

இதன் ஒரு அங்கங்கமாக ஞாயிற்றுக் கிழமைகளில் தனியார் மேலதிக வகுப்புக்களை நாடாத்துவ தொடர்பான முக்கியமான தீர்மானம் ஒன்றை பிரதேச செயலாளர், பள்வாசல் நிர்வாகம், தாறுல் குரர் ஆனியா அஹதியா சம்மேளனத்தின் நிர்வகம் மற்றும் தனியார் மேலதிக வகுப்புக்களை நாடாத்தும் நிர்வாகதினருடன் இணைந்து எடுப்பது காலச் சிறந்தது என்ற முடிவும் எடுக்கப்பட்டது.

Want your hotel to be the top-listed Hotel in Kalmunai?
Click here to claim your Sponsored Listing.

Website

Address

Kalmunai