MBC Media Network

MBC Media Network

Share

27/05/2026

பண்டாரவளையில் பேருந்தும் மோட்டார் சைக்கிளும் மோதி விபத்து – ஒருவர் காயம்.

பண்டாரவளை, தந்திரிய ஹீல்ஓயா வீதியில் நேற்று மதியம் இடம்பெற்ற விபத்தில் மோட்டார் சைக்கிள் ஓட்டுனர் ஒருவர் காயமடைந்துள்ளார்.

வீதியோரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காரொன்றை கடந்து சென்ற பேருந்துடன், எதிரே வந்த மோட்டார் சைக்கிள் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

விபத்தில் காயமடைந்த மோட்டார் சைக்கிள் ஓட்டுனர் உடனடியாக மீட்கப்பட்டு, பண்டாரவளை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பண்டாரவளை பொலிஸ் மேற்கொண்டு வருகின்றனர்.

Liru

Photos from MBC Media Network's post 26/05/2026

அமரர் ஆறுமுகன் தொண்டமானின் 6ஆம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுஷ்டிக்கப்பட்டது

இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் முன்னாள் பொதுச் செயலாளரும் முன்னாள் அமைச்சருமான அமரர் ஆறுமுகன் தொண்டமானின் நினைவுகளைப் போற்றும் வகையில் இந்த நிகழ்வு பசறை இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் காரியாலயத்தில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் அன்னாரின் உருவப்படத்திற்கு மலர் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தும் நிகழ்வு இடம்பெற்றது.

இந்த அஞ்சலி நிகழ்வு மாவட்ட பிரதிநிதி ஆறுமுகம் கோகிலா தலைமையில் நடைபெற்றது.

நிகழ்வில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் அமைப்பாளர் வேலு ரவி, பசறை பிரதேச சபை உறுப்பினர் சுப்பையா சுதாகர், மாவட்ட தலைவர், மாவட்ட தலைவி உள்ளிட்ட கட்சியின் முக்கியஸ்தர்கள் மற்றும் ஆதரவாளர்கள் பலரும் கலந்துகொண்டனர்.
அமரர் ஆறுமுகன் தொண்டமான் மலையக மக்களின் அரசியல், சமூக மற்றும் தொழிலாளர் உரிமைகளுக்காக ஆற்றிய சேவைகள் இந்நிகழ்வில் நினைவுகூரப்பட்டதுடன், அவரின் அரசியல் பணிகள் மற்றும் சமூகப் பங்களிப்புகள் குறித்து கலந்து கொண்டவர்கள் கருத்துக்களை பகிர்ந்துகொண்டனர்.
அவரது சேவைகளை என்றும் நினைவில் கொண்டாடும் வகையில் இந்த நினைவு தினம் அமைதியான முறையில் அனுசரிக்கப்பட்டது. கலந்து கொண்டவர்கள் மலர் அஞ்சலி செலுத்தி அன்னாரின் ஆன்மா சாந்தியடைய பிரார்த்தனைகளிலும் ஈடுபட்டனர்.

R.T. பசறை

26/05/2026

இன்று பல பகுதிகளில் 100 மி.மீ. வரை பலத்த மழை
May 26, 2026 - 07:11 AM -

இன்று பல பகுதிகளில் 100 மி.மீ. வரை பலத்த மழை
நாட்டில் தென்மேற்குப் பருவப் பெயர்ச்சி மழை நிலைமை படிப்படியாகத் தாபிக்கப்பட்டு வருவதன் காரணமாக, நாட்டின் தென்மேற்கு பகுதிகளில் அடுத்த சில நாட்களில் மழை நிலைமை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என்பதுடன், இப்பகுதிகளின் சில இடங்களில் சுமார் 100 மில்லிமீட்டர் அளவிலான பலத்த மழை பெய்யக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஊவா மாகாணத்திலும் அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களிலும் சில இடங்களில் பிற்பகல் 1.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.

மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுப் பகுதிகளிலும், வடக்கு, வடமத்திய, வடமேல் மற்றும் தெற்கு மாகாணங்களிலும் திருகோணமலை மாவட்டத்திலும் அவ்வப்போது மணித்தியாலத்திற்கு சுமார் 30-40 கிலோமீட்டர் வேகத்தில் ஓரளவு பலத்த காற்று வீசக்கூடும்.

இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் தற்காலிகமாக வீசக்கூடிய பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய விபத்துக்களை குறைப்பதற்கு தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம், பொதுமக்களை அறிவுறுத்தியுள்ளது.

Want your business to be the top-listed Media Company in Badulla?
Click here to claim your Sponsored Listing.

Website

Address

Badulla
Badulla