Secdo - srilanka
12/04/2024
அட்டாளைச்சேனை பிரதேசத்தில் உலர் உணவுப் பொருட்கள் வழங்கி வைப்பு
செக்டோ - ஸ்ரீலங்கா நிறுவனத்தினால்
அட்டாளைச்சேனை
8 மற்றும் 6ஆம் பிரிவுகளில் தெரிவு செய்யப்பட்ட வருமானம் குறைந்த மற்றும் பெண் தலைமை தாங்கும் குடும்பங்களுக்கு உலர் உணவுப் பொதிகள் வழங்கி வைக்கப்பட்டன.
குறித்த உலர் உணவுப் பொதி வழங்கும் நிகழ்வு செவ்வாய்க்கிழமை (09) செக்டோ - ஸ்ரீலங்கா நிறுவனத்தின் காரியாலயத்தில் அதன் தலைவர் சட்டத்தரணி ஏ.எல்.நியாஸ் தலைமையில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் செக்டோ ஸ்ரீலங்கா நிறுவனத்தின் ஆலோசகர் ஏ.நௌஷாட் (றிம்ஸி) நிறுவனத்தின் பொருளாளர் ஏ.எல்.றிம்ஸான், ஊடக இணைப்பாளர் ஏ.ஆர்.எம்.றிம்சான், மற்றும் சகோதரர் ஏ.எல்.பௌசர், ஜவாஹிர் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டு உலர் உணவுப் பொருட்களை வழங்கிவைத்தனர்.
இதன்போது வருமானம் குறைந்த மற்றும் பெண் தலைமை தாங்கும் குடும்பங்கள் என ஒரு தொகுதியினருக்கு உலர் உணவுப் பொதிகள் வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
குறித்த உலர் உணவுப் பொருட்களை வெற்றிகரமாக வழங்குவதற்கு நிதி மற்றும் பொருட்கள் என பல வழிகளிலும் உதவிபுரிந்த அத்தனை உள்ளங்களுக்கும் எமது நிறுவனத்தின் சார்பாக நன்றியினைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.
ஊடகப் பிரிவு
செக்டோ - ஸ்ரீலங்கா
Click here to claim your Sponsored Listing.
Category
Contact the organization
Telephone
Website
Address
Addalaichenai
32350