ReaderSPark

ReaderSPark

Share

அகம்
தூய்மையகம்
நூலகம்

அறிவு வளர்க்கும்
அற்புத இடம்
நூலகம்

பண்பாடுப் போதிக்கும்
பயனுள்ள இடம்
நூலகம்

அறவழிப்படுத்தும்
அழகிய இடம்
நூலகம்

அறிவாளிகள் இருக்கும்
அறிவார்ந்த இடம்
நூலகம்

அமைதிப் படுத்தி
மதி வளர்க்கும் இடம்
நூலகம்

விலைமதிப்பற்ற நூல்களின்
வசிப்பிடம்
நூலகம்

மறைந்த தலைவர்கள்
மறையாமல் வாழுமிடம்
நூலகம்

புரட்டப் புரட்ட
புத்திப் புகட்டுமிடம்
நூலகம்

எடுத்துப் படிக்க

09/09/2017

வாசிக்க....தினமணி 8.9.17 PP. 8

03/09/2017

பெண்ணே நீ
உன் உயிரை மாய்த்து
உலகை விழிக்க செய்தவள்.
உன் மழலை குரலில்
உதித்த ஓர் போராட்டத்திற்கு நியாயம் நிலை நாட்டப்பட்டிருந்தால் நாளைய உலகின் பல உயிர்கள்
உதிரம் சிந்திய உன்னை போன்ற ஏழை இறைவனால் காப்பாற்ற பட்டிருக்கும்.

NEET வேண்டும் என்று கூறும் சில மாமேதைகளுக்கு ஓர் குரல்:
இங்கு பயிலும் எம் சகோதர சகோதரிகள்,
மனனம் செய்து புத்தக வரிகளை அப்படியே எழுதினால் மதிப்பெண் என்ற முறையில் பயின்று தேர்வில் வெற்றி பெற்றவர்கள்..ஆனால், மத்திய அரசின் கேள்வி முறையோ புரிதல் முறை தேர்வை அடிப்படையாக கொண்டது..
கல்வி திட்டமே தேர்விற்கு எதிராக உள்ள நிலையில்.. ஓர் ஏழை குழந்தை தன் வயிற்று பிழைப்பை காப்பற்றி கனவுகளை சுமந்து நாமும் நாளைய டாக்டர் என்ற கனவை சுமந்து தனக்கு கற்பித்த பாடத்தில் எவ்வளவு மதிப்பெண் வேண்டுமோ அதை பெற்ற பின் ..
நடுநிலை தேர்வு என்ற பெயரில் NEET தேர்வினை நடத்தி அதன் அடிப்படையில் மட்டுமே மருத்துவ படிப்புக்கு சீட்டு.. என்பது என்ன நியாயம்!

அடிமட்டத்தை உறுதி செய்த பின் கட்டிடத்தை உயர படுத்துங்கள்-இல்லையேல் உடைவது கட்டிடம் மட்டும் அல்ல..அதில் உறங்கி கொண்டிருக்கும் பல கனவுகள்

விழித்தெழு
சிவகுமார்

Want your school to be the top-listed School/college in Pollachi?
Click here to claim your Sponsored Listing.

Category

Address

Dr. MCET
Pollachi
642003